திங்கள், 14 அக்டோபர், 2024

அவள் சிரிப்பிலே நானும் பூக்கிறேன்



ஒருத்தரும் காணயில்ல

அவயென்னப் பாத்தத

சட்டெனக் குனிஞ்சுபுட்டா

சாவடி நெஞ்சுக்குள்ள!


கன்னத்த உரசிக்குழையும்

காதோர நறுக்குமுடியும்

உச்சியில கொண்டபின்னி

ஆள்மிரட்டும் அருவாப்புருவம்


கூந்தலில் சரம்கோர்த்து

அசைந்தாடும் சிமிக்கிக்கம்மல்

சேலைவிலக்கி எட்டிப்பாக்கும்

அரைச்சாண் இடுப்பு


பல ஆயிரங்கவிதை 

இதுவர எழுதியிருக்கேன்..

இப்படிப் பக்கத்தில

ஏங்கூட வந்து நீண்டதில்ல!


உரசப்பற்றும் மூங்கில்போல

கோபக்காரன் நான்

மணப்பெண்ணாய் 

அவள் சிரிப்பிலே—பற்றி 

எரிகிறேன் பாவமாய்.!


~~~~~~***~~~~~

வரிகள்: சிறி ஆரோன்

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...