துவண்டு துக்கித்து
சோம்பலில் கழிக்கும் நேரமதை
முதலீடாய் கணிப்பதில்லை
வாழ்க்கை
வளைவுப் பாதை
பலகாதமாயினும்
அடுத்தடுத்த எதிர்பார்ப்பு
களைப்புக்கு அருமருந்தாகும்
ஏற்றதின் உச்சியில்தான்
வாழ்நாளில் காணாத
அற்புதக்காட்சிகள்
ஒளிந்திருக்கும்
சிகரம் நோக்கிப்புறப்படு
சுகமான இறங்குபாதையின்
தொடக்கமும் அங்கேதான்
உள்ளது!
~~~~~~~~~~~~~~~
வரிகள்: சிறி ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக