முழங்கால்கள் வலிக்கும் நடை நிறுத்தாதே!
நெஞ்சம் படபடக்கும் நோக்கில் விலகாதே!
கண்கள் இருண்டு கலங்கிடும் இமைமூடாதே!
தேகமிதுதான் சோர்வுறும் இட்சிய தாகமல்ல.
*
உன்னில் குறைகண்டு இவ்வுலகம் புறம்பேதள்ளும்
இலக்கை மெருகேற்றி நோக்கில் குறியாயிரு
வியர்வை அதுவொன்றுதான் விலைகணிக்கப்படாத செல்வம்
சகலசம்பிரதாயங்களும் உன்கால்கட்டும் வலுகவனம் சிக்கிடாதே!
*
பின்புறமிருந்து தடுக்கிவிட புன்னகைமுகங்கள் பலவுண்டு
தோல்வியில் துவளாமல் துணிந்து நில்
வெற்றிச் சுவையது வலியவனுக்கு மட்டுமன்றே!
விடாமுயற்சியோடு ஓடும் தோல்வியின் தோழனுக்குமே!
***
வரிகள்: சிறி ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக