[எது தமிழர்களின் மதம்?
❓❓❓❓❓❓❓❓❓
♨️தமிழர் நாகரிகம் என்பது♨️
மிகப்பழமை, மேம்பட்ட பண்பாடு, கலாசாரத்துடன் கி. மு 6000 வரையான தொன்மை கொண்ட வரலாறு என்று தொல்பொருளியல் சான்றுகள் மற்றும் அகழ்வாய்வுகள் சொல்லுகிறது.
தமிழர்களின் உண்மையான மதம் பற்றி பெரும்பாலானோர் தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை; அதனால்தான் நமது மொழியே நமது பெரும் அடையாளம் ஆகிறது.
♨️ தமிழர்கள் ஊனுண்ணிகள்♨️
நம் முன்னோர் வேட்டையாடியும், மிருகம் மற்றும் பறவைகள் வளர்த்து, இறைச்சி உண்டு வாழ்ந்தனர் ஆகயால் #கொல்லாமை , #புலால் மறுத்தல் நம் முன்னோர் கொண்டிருக்க வாய்ப்பில்லை. தங்கள் தேவைக்கும், சூழ்நிலைக்குமாய் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலில் #பலி கொடுத்தும் , இறைச்சிகளை உண்டும் வந்துள்ளனர் என்பதும் #இலக்கிய நூல் களில் இருந்து அறிய முடிகிறது மேலும் இவை பாவத்திற்ககுரிய செயல்களாக நம்முன்னோர் கருதவில்லை.
♨️ தமிழர் வாழ்வியல்♨️
தமிழ் இலக்கியங்களில் தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கும் பழமை வாய்ந்த நூலான #தொல்காப்பியம் நடுக்கல் வழிபாடு பற்றியும் குறிப்பிடுகிறது; இந்நூல் தோறாயமாக 5000 ஆண்டு பழமைமிக்கது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
♨️ தமிழர் மரபு வழிபாட்டு முறை♨️
#நடுக்கல் வழிபாடு என்பது தமது முன்னோர்களில் வழிகாட்டிகளாக
விளங்கி வீரமரணமானவர்கள் நினைவாக கல்லை நட்டு அதுவே இன்றைய #குலதெய்வம்_வழிபாடு ஆகும். உதாரணமாக முருகப்பெருமான்
கருப்பன், முனியர், விருமாண்டி
மதுரை வீரன், எல்லைச்சாமி இன்னும்...
♨️தமிழர்கள் மத சார்பற்றவர்கள்♨️
ஆதித்தமிழர்கள் மதசார்பற்று இயற்க்கையோடு இசைந்து வாழ்ந்துவத்துள்ளனர் என்பதாய் #தொல்காப்பியம் சொல்லும் கருத்துகள் உணர்த்துகிறது; ஆக மதம் என்ற ஒன்று தமிழர்களுக்கு இல்லை என்பதே உண்மை.
♨️தமிழர் மாதத்தில் நுழைதல்♨️
நமது முன்னோர் நடுகல் வழிபாட்டுக்கு ஒத்ததான பண்புடைய #ஆரியதெய்வ நம்பிக்கைகள் ஆரியரோடு தமிழர் கலக்கும் பின்னான காலகட்டத்தில் அறிந்து அதனை தங்களது தெய்வங்களாக மறுப்பின்றி ஏற்றுக் கொண்டுள்ளனர்; புலால் மறுத்தலையும் ஏற்றுள்ளனர்; அதன் கூடவே சாதிகளும் நமக்குள் புகுந்துள்ளது. பின்னர் கி.பி 52 இலிருந்து கிறிஸ்தவமும்; கி.பி 700 களில் இசுலாமும் புகுந்து கொண்டது.
♨️ தமிழரின் மெய்யியல்♨️
#தொல்காப்பியம் பல்வேறு மெய்யியல் சார்ந்த கருத்துக்கள், இயற்கையின் தன்மையை அறிந்து வாழ்ந்த தமிழர்களின் பல கண்டுபிடிப்புகள் மருத்துவக்கலை, தற்காப்பு கலை, அறிவியல், இசை, இலக்கணம் மேலும்பல சொல்லுகிறது.
♨️ தமிழா விழித்துக்கொள் ♨️
ஆக இன்று #மதம், சாதி, அரசியல், சினிமா, போதை வஸ்துக்களில் சிக்கி உணர்வற்று கிடக்கிறோம்; நமக்கான கடமை நாளைய நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளான #அடுத்த சந்ததிக்கு நல்ல எதிர்காலம் , கொடுப்பது அதற்கு ஒற்றுமை, ஒழுக்கம்,பண்பாடு, சமூகநீதி, மாசில்லா இயற்கை, தேசத்தில் சிறந்த தலைவர்கள் மட்டுமே அவசியம்!!
♨️ உறவுகளே மன்றாடுகிறோம்♨️
#எந்த மதம்?? #எந்த ஜாதி??
#வேற்றுமை விடு ; #தமிழனாய் எழு !!
#உன் தேசம் ; #உன் நாளைய சந்ததி செழிக்க நல்ல தலைவனை தெரிவு செய்; #மாற்றம் ஒன்றே மாறாதது ; #நமக்கு தமிழர் என்னும் குலம்; ஒரே கடவுள்தான் உலகில் அதற்கு பல நாமம் இருக்கலாம் வெறுக்காதே உன் உறவுகளை.
நன்றி_
தொகுப்பு ஸ்ரீ ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக