வெள்ளி, 29 மே, 2020

ஐயன் கலாமும் ; ஆரோன் நானும் 🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀🚀

3️⃣_கலாம் சொன்னது:_

“#அக்னி ” ஏவுகணை 1989 ஏப்ரல் 20 ல் சோதனை பார்க்க நாள் குறிக்கப்படுகிறது,
நாடே எதிர்பார்க்கும் 20 ம் தேதி கிளம்ப சில நிமிடங்கள் இருக்க  தொழில்நுட்ப பிரச்சனையால் #ரத்து செய்யப்படுகிறது இதை ஊடகங்கள் கிண்டல் செய்தன.
மேலும் ஆராய்ச்சி கூடத்தில் #தோல்வியால்  துவள்கிறார்கள்; ஆனால் நான் “எஸ் எல் வி முயற்சியில் நாங்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் கடலில் விழுந்தது ஆனால் “#அக்னி ” கண்முன்னே இருக்கிறது #முயற்சியுங்கள் “ உங்களால் முடியும் என்றேன்.

✒️விஞ்ஞானி மாத்திரமன்றோ; தெளிந்தகுருவும் ஊக்கந்தரும் ஞானியுமாய் வாழ்ந்த கலியுகத்தில்
ஒரேயொரு சாந்தசித்தாந்தி கலாம்.

2️⃣_கலாம் சொன்னது:_
மீண்டும் தூக்கம் இல்லாமல் உழைக்கிறார்கள், 1989 மே 1 அதாவது பத்து நாட்களில் குறிக்கப்படுகிறது ஆனால் கிளம்ப 10 நொடி இருக்கும் மீண்டும் ரத்து செய்யப்படுகிறது.

1️⃣_கலாம் சொன்னது:_
பின்னரும் கடுமையான முயற்சிக்கு பின் தவறுகள் களையப்பட்டு 1989 மே 22 ல் அக்னி கிளம்ப 20 நாட்களில் திட்டமிடப்படுகிறது அன்று தட்ப வெட்பநிலை சரியில்லை, புயல் அபாயம் என்று வானிலை பயமுறுத்தியது ஆனாலும் வெற்றிகரமாக “அக்னி” பாய்ந்து விடுகிறது. எங்களுடைய ஐந்து வார மன உளைச்சலை 600 நொடியில் சடாரென்று துடைத்து விட்டது.

✒️"விடாமுயற்சி மாத்திரமே
இவ் வாழ்க்கையில் வெற்றி
கொணரும் பரமரகசியம் - என்று
அறிந்திருந்தார் கலாம்."

🌱_கலாம் சொன்னது:_
பாதுகாப்பு அமைச்சர் கே சி பந்த் “கலாம்! நாளை அக்னி வெற்றியை கொண்டாட நான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என;  கேட்க அதற்கு நான் யோசித்துவிட்டு RCI ல் [Research Centre Imarat] ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றேன்.

✒️"செயற்கை அறிவாராய்ச்சியில்
கைதேர்ந்த கலாம்; இயற்கையிலாது செயற்கை பயன்தராது - என்று
ஆழமான நிசத்தை..
மனதில் வேரூன்றியிருந்தார்.!"

🚀_கலாம் சொன்னது:_
ஜெர்மனியின் உதவியால் தயாரித்து இருப்பதாக மற்ற நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இது சுதேசி ஏவுகணை என்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை ஆனாலும் அதை பொருட்படுத்தாது நாங்கள் அடுத்த ஆராய்ச்சியில் இறங்கினோம்.

✒️"அவாமானங்கள்
ஒவ்வொன்றும் தான் கற்கும்
ஒவ்வொரு புத்தகத்திற்கு சமமாக எண்ணியிருந்தார் கலாம்
அதனாலயே அவருக்கு சக்கிப்பு சத்தியகுணமாக இருந்தது.!"

📡 _கலாம் சொன்னது:_
நான் #சோதனையில்  ஈடுபட்டுகையில் வெடி விபத்து ஏற்பட்டு அதில் #தீக்காயம்  ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்க படுக்கை வசதி கூட இல்லாமல் இருந்திருக்கிறேன்; இது மட்டுமல்ல நான் #விஞ்ஞானியாக ஆராய்ச்சி காலத்தில்  #பொதுப் பேரூந்தில் தான் பயணித்தேன்.

✒️"கலாமின் #எழிமைதான்
தமிழ்நாட்டில் உதித்த தமிழரில்
#கக்கன் , #காமராசர் க்கு
அடுத்தவோர் தலைவராக
ஒப்பிடத் தூண்டுகிறது.!"

நன்றி.
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 
#www.mytamilpoet.blogspot.com 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...