ஞாயிறு, 31 மே, 2020

எரிந்தது நூலகம் அல்ல; தமிழர் அடையாளம்!

🔥தமிழர்களின் அடையாளமாக ஆசியாவின் அசைக்க முடியாத நூல்களின் கல்வியின் திமிராக நிமிர்ந்து நின்ற புத்தகங்களின் ஆலயம் எரியூட்டப்பட்டது இன்றைய நாள் 1981 வைகாசி 31, அன்றைய நாள் நினைவுக்கு அடிக்கோடிடும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. தமிழர் பொக்கிசமான வரலாற்று ஆதார நூல்கள் மறுநாள் வரை எரிந்து புகைந்து கொண்டிருந்தது.

🩸சுதந்திரக்குக்கு முந்தைய இலங்கையில் ஆரம்பித்த ‘அரசியல் பிணக்குகள்’ அரைநூற்றாண்டின் பின்னர் இனப்பிரச்சினைகள்- ஆயுத மோதல்களாக வெடிக்க காரணமான முக்கியமானது யாழ்பொது நூலகம் மீதான #இலங்கை அரசின் வன்முறை அதற்குள்ளிருந்த கிட்டத்தட்ட #ஒரு இலட்சம் புத்தகங்கள் ; வரலாற்று #சிறப்புமிக்க ஓலைச்சுவடிகள்  என்பன #கொடுந்தீயில் எரிந்து சாம்பலாகியது.

💥எரிந்து இன்று 39 வருடங்கள் கடந்து விட்டது அதற்குள் #இனவிடுதலை போராட்டம்  வீறுகொண்டு எழுந்து கோலொச்சி; ஒட்டுமொத்த வல்லரசுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசினால் #கருவறுத்தும்  முடிக்கப்பட்டுவிட்டது. 

💔ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் படுகொலை; ஒரு மில்லியன் மக்களுக்கும் அதிகமானவர்களின் புலம்பெயர் வாழ்க்கை; இலட்சக்கணக்கான தமிழர் வாழ்விழந்து அலைக்கழிவு என்று செல்கிறது அவலங்களின் பின்னணி.

💀யாழ். பொது நூலக எரிப்பு என்பது ஒரு இனத்தின் மீதான வன்முறையின் அழிக்க முடியாத அடையாளம். தமிழர்களின் புலமைச் சொத்தின் மீதான அதிகாரவர்க்கத்தின் அசிங்கமான ஆத்திரம் இப்படி நீண்டு செல்கிறது.

✒️ வரிகள் ஸ்ரீ ஆரோன்:
"லங்கா அரசு கட்டளை
தமிழின அழிப்பு காடயருக்கு..
யாழ் பொதுநூலகத்தை
தீயிடச்சொல்லி.!
ஆனந்த கூத்தாடிய
காடைகோணகியார் - தாம்
மனகுரோத வெறியில் தீயிட்டர்..
இலட்ச லட்சமாய் கருகிய
வரலாற்று நூல்கள்; ஆதிஏடுகள் - அவை
இருமலும் அழுகைக்குரலும்..
உலகத்தமிழர் இதயங்களதை நொறுக்கியது ; கல்வியறிவிலா
சிங்களதேசமோ கைகொட்டி சிரிக்கிறது.!"

நன்றி_
தொகுப்பு ஸ்ரீ ஆரோன் 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...