பேசும்மா..மூச்சு முட்டுதும்மா..!!
பலநாள் பசிக்கு எனக்கு
தண்ணீர் மட்டும் போதாதம்மா..
இத்தன நாள் ஊங்கூட
பட்டினியா நாநலஞ்ச;
இப்போ அப்போன்னு ஊரெல்லாம்
கொண்டலஞ்ச முடியல..
அம்மா.. அம்மா...
பேசும்மா மூச்சு முட்டுதும்மா..!!
ஏ..அப்பன் சொல்லும் கேக்கல - நீ
ஏம்பசி தீக்கனூண்ணு - மனுசவாட
எட்டியும் எதுக்காக இங்கவந்த..?
அம்மா.. அம்மா...
பேசும்மா மூச்சு முட்டுதும்மா..!!
நேத்திது நம்ம வனதேசமுன்னு;
ஆத்தாதது புலம்பி ஏப்பிளைப்பா
பெருமூச்சு விட்டு வந்த
எனக்கு பசியாப் பசிக்குதே..
அம்மா.. அம்மா...
பேசும்மா மூச்சு முட்டுதும்மா..!!
ஏதோ மனுசப்பய உண்டிதரவரா..
பயமா இருக்குதுன்னும்; ஏம்பசியாத்த
ஏடுத்துகிறேன்னும் ஆறுதலா முனகின
இப்போ ஊஞ்சூடு குறையுது கூட
ஏஞ்சீவன் போகக் கேக்குதிங்க
அம்மா.. அம்மா...
பேசும்மா மூச்சு முட்டுதும்மா..!!
இக்... இக்.. இக்..
ம்மா.. ம்மா... மா...ஃ
இரங்கலுடன்..
நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன்
#கர்ப்பிணி யானை உயிரிழப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக