வியாழன், 28 மே, 2020

தமிழீழம்

பொன்னிழை வண்ணக்கூண்டில்
புழுதிபடிந்த புன்னகையொடு..
துருபிடித்து தொலைந்து போன
திறவுகோலின் ஏக்கத்தில்..!

திருப்பங்கள் பலகண்டு;
உலகைத் திசைமாற்றி_
இனத்தடம் அழித்து;
தரணி விட்டோழிந்தான்..
தலைவனென்று - மார்புதட்டி
எட்டிய திசையெலாம்
கொட்டமிட்டுக் கொண்டாடி - #ஈழம்  
#தாய் தின்றமண்  என்றே
சபித்தாலும்...

வீரச்செழுந் தமிழர்களின்
புதிக்கரு குவியலில்
#மூப்பு; பிணி; சாக்காடு _
_தாண்டியொரு தோரணையோடு
இன்றும் #தமிழீழம்  ..!

நன்றி🔥
#வரிகள் ஸ்ரீ ஆரோன் 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...