பெருமை கொண்டாய்;
மாணாக்கர்தமை #கனவுகாண் என்றாய்;
குழந்தைகட்கு #அறிவுசார்
கதைகள் சொன்னாய்;
இளையோருக்கு #தேசப்பற்று
எழுச்சி தந்தாய்;
மதம் மொழி இனம் கடந்து - உன்
மக்களை நேசித்தாய்!
தலைமுறை தாண்டி
மனிதர்(ம்) வாழ யோசித்தாய்
#அக்னிச் சிறகுகள் தனால்
வேற்றுமைகளை சுட்டெரித்து
#தேசமிதின் கவுரவத்_தாய் நீ
"#பசுமை கலாம் திட்டம் " அதில்
நம் பாலைதேசத்தை சோலையாக்க
#சின்னக்கலைவாணர் _கொண்டு
சிந்தைக் கருவில் சீரியவிதை விதைத்த
#வனம் ஏகாத வனவாசி - நீ
நீ வறுமையின் குழந்தையாய் பிறந்து;
திறமையின் மிகுதியால் வளர்க்கப்பட்டு;
விடாமுயற்சியால் உயரங்கள் தொட்டு;
கவுரவப் பலகணியில் உசந்து உட்கார்ந்து;
இல்லறம் துறந்து நல்லறம் கற்பித்தாய்;
பின்னும்- தலைக்கனம் ஏறாத தலைவனாய்
கக்கன், #காமராசர் வரிசையில்
தமிழ்நாடு கண்ட தமிழன் நீ..!
உன்புகழ் வையகம் சொல்ல - தமிழினமே
பெருமை கொள்கிறது தமிழா!!
நம் முப்பாட்டனவன்
கனியன் பூங்குன்றன்
நாமத்தை ஐரோப்பிய தேசத்தின்
அரசியலரங்கு வரை "#யாதும் ஊரே; யாவரும் கேளீர்! " என்ற ஞானவரியால்
பொதுமை உரைத்த தமிழன் - இவர்.
இவரை வாழ்த்த சொரிந்த
பூக்களின்களின் குழைந்தை மலர்கள்
ஆர்ப்பரிக்கின்றன தாங்கள் - தான்
பாக்கியவான்களில் கடைசி என்று
அன்றுதான் - பாரெங்கும் இரங்கள்
தாங்கோனா துயர் விடை கொடுத்தோம்
இராமேசுவரம் கடலில் கரிப்பது
உப்பல்ல எங்களின் கண்ணீர்!
தங்களை மூணே வரியில்
சொல்லி முடிக்கிறேன்..
"கலாம் நீ காலம் கரைக்காத
இந்திய மணிமகுடத்தில் தமிழ்
பதித்த கோவினூர் வைரம்"
நன்றி.
#வரிகள் ஸ்ரீ ஆரோன்
#www.mytamilpoet.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக