மெல்லிய மெளனத்தின்
பொழுதுகளில் - அவள்
கண்கள் பேசும்
ஜால வார்த்தைகளிற்கு
இவ்வுலகில்
எம்மொழிக் கவிதையும்
ஈடல்லவே !
கூட..
அவ்விழி ஜாலங்களின்
பொருள் விளக்க
குமரியின் புலவனாலும்
ஒண்ணாது - அவளால்
சீவிக்கும் எனைத்தவிர.!
இப்படிக்கு,
உண்மையுள்ள காதலன்.
ஸ்ரீ ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக