சுதந்திர இந்தியாவின்
முதற்ச்சட்ட அமைச்சனே;
அரசியல் சாசனத்தின்
தார்மீக தகப்பனே..
⚖️
என் தேசத்தின்
சமூகமருத்துவனே;
பொருளியல் அஞ்ஞானியே;
பகுத்தறிவுச் சிந்தனை சிற்பியே.!
⚖️
அதிசிறந்த எழுத்தாளன் நீ..
தலை சிறந்த பேச்சாளனும் நீ..
பூகோள வரலாற்று ஆசானாவரே;
ஒடுக்கப்பட்ட மக்களின்
ஒற்றை ஒளிவிளக்கே.!
⚖️
தேசபிதா காந்தி கண்ட
'சுதந்திரம்' எனும் பொய்க்கால்
குதிரையின் மெய்க்காலே
நீயல்லவா சாணக்கியா.?
⚖️
வெள்ளையனிற்கு
சாட்டையடி கொடுத்து
நேதாஜி மீட்ட தேசத்தை
கறுப்பங்கி நீயல்லவா
கண்ணியமாய் காத்திட்டாய்.!
⚖️
"இந்திய பூர்வக்குடி தமிழர்கள்;
இத்தேசம் முழுமைக்கும் இவர்களே
வாழ்ந்தனர்" - என்று அண்ணல் நீரே
ஒற்றை வார்த்தையில் எங்கள்
கவுரவத்தை நிரூபணங்காட்டிநீர்..
நீர்_வாழ்க வாழ்கவே..
⚖️
உன் வாழ்நாள் பூராய் - நீ
அர்ப்பணித்தது இந்திய
தேசத்திற்கு அல்லவா
இராசதந்திரியே??
⚖️⚖️⚖️
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக