இதுகாண் குறிஞ்சிப்பறை;
முல்லைப்பறை; மருதப்பறை;
நெய்தற்பறை; பாலைப்பறை - எனும்
ஐந்திணையிலும் முழக்கிய
பறையிசைக் கருவியிதை
ஏழாயிரம் ஆண்டுகள் தாண்டிய
தொன்மையின் தொல்காப்பியம் சான்றுபகர்கிறது..
நம் தமிழ் பண்பாட்டு; பாரம்பரிய பறையிசையின் வீரியம் - இன்று
கறுப்பின ஒடுக்குமுறை வெற்றுமைக்கு
உறவுபூண்டு கலவரங்களால்
குருதியாற்றில் மிதக்கும் ஐக்கியமில்லா_
ஐக்கிய அமெரிக்க குடியரசு தனை
அசைத்து வருகிறது - இங்கு.!
நன்றி_
#வரிகள் ஸ்ரீ ஆரோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக