வெள்ளி, 19 ஜூன், 2020

அறிவின் தரவரிசை...!!


"தமிழர்களே.. 
நம் தமிழ்மொழி ஒரு மொழி மட்டுமல்ல
இந்த உலகத்தில் மனிதனின் சுவட்டின்
ஒரேயொரு சான்றாதாரம்"

உலகில் உள்ள உயிரினங்களை,
அவற்றின் அறிவின் செயல்திறன் கொண்டு
ஆறு வகைகளாக நவீன உலகின் அறிவியல் பிரிக்கிறது

ஒரு காலத்தில் மரம் அஃறிணையாக பார்த்த - உலகம்
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று 1927ல்
மேதை ஜெகதீஷ் சந்திரபோஸ் உலகிற்கு அறிவித்து
நிலைமை மாறியது 

முடிவில்.. உலக உயிரினங்களை செயல்திறன்
அடிப்படையில் ஆறு பிரிவாக பிரித்தது அறிவியல்.

உடலால் உணர்வது ஓரறிவு
மரம், செடி, கொடி, புல், பூண்டு இவை
தங்கள் உணர்விற்கு எதிர்வினை ஆற்றாது.

உடல், நாக்கால் உணர்ந்தால் ஈரறிவு
மீன் போன்ற நீந்தும் கடல்வாழ்
உயிரிகள் வகையறாவில்.

உடல், நாக்கு, மூக்கு ஆகியவற்றால்
உணரமுடிந்தால் மூன்றறிவு ஊர்வன
பட்டியலில் எறும்பு, கரையான், அட்டை போன்றவை.

உடல், நாக்கு, மூக்கு, கண்ணால்
உணரத் திறன் கொண்டவை நான்கறிவு 
பூச்சியினங்கள் மேற்படி குடும்ப மெம்பர்கள்.

உடல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகியற்றால்
உணரமுடிந்தால் ஐந்தறிவு
விலங்குகள், பறவைகள் இதில்.

உடல், நாக்கு, மூக்கு, கண், காது, பகுத்தறியும் மூளை
ஆகிய ஆறு உறுப்புகளை பயன்படுத்தினால்
ஆறறிவு மனிதர்கள்  இப்பட்டியலில். 

இதெல்லாம் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு - என்று 
உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது - ஆனால்
ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான 
தொல்காப்பியத்தில் மிகத் தெளிவாக
பிரித்து கொடுத்திருக்கிறார்கள்

அன்றே தமிழும், தமிழர்களும் அறிவுத்திறனில்
அறிவியல் திறனில் கொடிகட்டி பறந்திருக்கிறார்கள் 
என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.

‘‘புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ 
‘‘நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ 

‘‘சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ 
‘‘நண்டும் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’  

‘‘மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ 
‘‘மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ 

தமிழின் தொன்மைதனை
வெளிநாட்டு ஆய்வாளர்கள்
பார்த்து பிரமித்து - உலகின் 
மிகத் தொன்மையான மொழி
தமிழ் என்று சத்தியமடிக்கிறார்கள்

உலக மொழிகள் ஆய்வு செய்த 
அமெரிக்க மொழியியல் அறிஞர் 
நோம் சோம்ஸ்கி ‘‘உலக மொழிகளில் 
மூத்த முதல்மொழி தமிழாகத்தான்
இருக்க வேண்டும்.!’’ என்று முடிக்கிறார்.!

"உன் பிள்ளைகளாய்
நாங்கள் பிறப்பெடுக்க - என்
மாதவம் செய்தோம் தமிழ்த்தாயே"

வரிகள் ஸ்ரீ ஆரோன் 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...