திங்கள், 4 மே, 2020

என்தவம் செய்தேனம்மா தமிழி.?



தமிழியுன் சிறப்பினை 
கேரளத்து கவிஞர் "ஆற்றூர் ரவிவர்மா"
உன் பேரனாயிருப்பதயே அகமகிழ
ஆர்ப்பரித்து கொண்டாடுகிறார்..

என் தாய்த்தமிழியுனக்கு
மாகனாய் இப்பிறப்பெடுக்க-யான்
என்தவம் செய்தேனம்மா?
 
நின்பெருமை அகிலமெங்கும் 
பறைசாற்றிப்புகழ்வேன் நீதந்த
கவிஞானக்கணை பூட்டிப்பெருமிதமாய் தமிழியுன் அங்கனென்று
நானுமிங்கு !

நீவாழ்க.. 
பலகோடி நூறாயிரமாண்டுகள்;
இப்பிறப்பல்ல இனியென் எப்பிறப்பிலும்
தாய்த்தமிழி நீயென்ன்தாய் 
என்றிடவே பெருமைகாண்பேனே..

இப்பூமியிது அழிந்தாலும்
உன்னக்கேது மரணம்
உனக்கேது..?

காரணமிது என்மனசு
கேட்கிறதும் நியாயம்தானே..
தமிழ் பேசும் ஓரினம்
இவ்வண்டவெளியில் எந்தோர்கோடியில்
வேறோர்பூமியில் வாழவில்லை
என்றுறோர் கருதுகோள் உண்டோ.??
இல்லயே ! 

ஆக இப்பிரபஞ்சத்தில்
நிறைவான மொழி- நீயென்தாய்
தமிழியுனக்கு தலைவணங்குகிறேன்.!

என் தாய்த்தமிழியுனக்கு
மாகனாய் இப்பிறப்பெடுக்க-யான்
என்தவம் செய்தேனம்மா?

நன்றி -
வரிகள்: ஸ்ரீ ஆரோன்
www.mytamilpoet.blogspot.com 

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...