வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

மெய்க் காதலன்..


நானும் தாய்தான்..
கற்பனைக் கருவறையில் கருவேற்றி 
நிறைமாசம் கடந்தும்
துடிபற்று பிறந்த
என் கனவுகளின்
ஒற்றைத் தாய் நான்..
-
மெய்ப் பிரசபவலி
பல மணித்தியாலங்கள்
பட்சம் நீளலாம்
ஆனால்..
-
என்னிதயம் வலிதனை
வாழும்காலம் பூராவும் சுமக்கிறது
ஆக நானும் தாய்தான்..

அனுபவத்தின் தீர்க்கம்.!

சரியான 
சில காரணங்கள் 
பெரிய தவறுகளையும் 
வரலாற்றில் நியாயப்படுத்தும்
என்பதே அனுபவத்தின் தீர்க்கம்.!

தோல்விகளின் ராஜாதான் வெற்றி..!


ஒரு முழுமையற்ற
வெற்றியில் திளைத்து 
நகராத நொடியே
ஒன்றன் பின் ஒன்றான
தோல்விகளால்
சோர்ந்து போனேன்..!
நான் சந்தித்த
அத்தனை தோல்விகளும்
சொன்ன கதை
ஒன்றே ஒன்றுதான்..
''எங்களை அறக் கற்றுக்கொள்
நீ தேடாமலே எங்கள் ராஜா
உன்னை தரிசிப்பார்''

மகிழ்ச்சி



நம் மனதில் மகிழ்ச்சியை
உணரும்போது சந்தோசமாக 
வாழ்கிறோம்..
ஆதலால்...
மகிழ்ச்சியை எதிர்பாற்பதிலும்
சாலச்சிறந்தது நமக்குள் நாமே
அதை உணர்வதுதான்
நண்பர்களே..!
இங்கு சந்தோசமும், துக்கமும்
நமது மனோநிலைதான்
தங்கியுள்ளது.

வெற்றியின் இரகசியம்


நான் இருவரை
முப்பது வயதுகள்தானே
கடந்திருக்கிறேன்.!

ஆனால்....
முப்பது வருடங்கள்
தோற்றுக்கொண்டே
இருந்திருக்கிறார்
வெறுமனே இல்லை
முயற்சியோடு...!
நாயகன் லிங்-கன்(LINK-HORN)
இதுவே வெற்றியின் இரகசியம்...!

அன்பு..!




வேடந்தாங்கல் பறவைகள்
தனக்கான மரணத்தின்
நாளை ஊகித்ததும்
கூட்டதில் பிரிந்து
தனியாய் மரணத்தை சந்திக்கும்
என்பது ஆராய்சிகளின்
உண்மை

அதுபோல்
அன்புகொண்ட
சில மனிதரும்
உறவுகளிற்கு மனவலிகளை
கொடுத்திட வலிதிலாது
தனிமைப்படுகிறார் - என்பது
மனிதந்துவத்தின் துயரம்..!

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

இன்றில் நானில்லை.!?



நாளை..
நான் காற்றிலா கிரகத்திலும்
வாழத்தகுதியாய் உணர்கிறேன்.!!

இதன் நிஜம்..
இன்றுங்கூட - நான்
இன்றில் வாழவில்லை..!

உன்னோடு..
இன்பமாயிருந்த
நேற்றில்தான் ஜீவிக்கிறேன்
என் ஜீவனானவளே.. 

காத்திருந்து.. காத்திருந்து..



பெண்களின் 
வார்த்தை ஜாலத்தில் 
அவ்வளவாய் 
நம்பிக்கை இல்லாதவன் நான்.. இருந்தபோதும் 
உனது அழைப்பிற்காய் மாத்திரம்.. காத்திருந்து.. காத்திருந்து.. 
அவ்வப்போது காய்ந்து 
சருகாகியும் தீர்கிறேன்.!


சுகம் விசாரணைக் கைதி.!

என்னை 
காதலிபவர்களில் 
எவரையும் ஏற்றுக்கொள்ள 
என் மனசுக்குத் தகுதியில்லை.. நான் 
காதலிப்பவளிற்கு 
என் காதலை புரிந்து கொள்ள 
முழுதாய் திராணியுமில்லை.. ஆக.. அனுதாபத்தின் மீதியில் அவளின் 
'சுகம் விசாரணைக் கைதியாய்' 
அவளையே நெசித்து 
வாழுகிறேன்.!


கண்மணி.!


நீ எனை 
முழுதாய் காதலிக்கவில்லை 
என்று சொல்லாமல் 
சொல்லியும்..

உன் காதலை 
தொலைத்திடாமல் 
தொடர்கிறது இந்தத்- 
துன்பியல் இதயம்..

உனக்கு.. 
என்பாலானது
விடுகதையானாலும்.

எனக்கு.. 
உன்மீது கொண்டது 
தொடர் கதைதான் 
ஆகுமடி கண்மணி...

குறைப்பிரசவக் காதல்..

என்
உடலில்
அவ்வப்போது உழலும்
மரணவலிதனை விடவும்..
உன் குறைப்பிரசவக் காதலை
தினந்தினம் உணர்வதால்
வாட்டும் உயிர் வலியை
தாங்கத் திடம் கேட்டே
தேவனை பிரார்த்திக்கிறேன்.!

நியாயந்தானடி அழகே.!


உன்
காதல் வார்த்தைகளிற்கான 
என் மனதின் ஏக்கங்கள்
ஏராளம் புலம்பிக்கிடக்க..
உன்னிடம்
என்மீதான அன்பில்
பஞ்சம் அதுதானும்
எல்லை கடந்திருக்க..
வாஸ்தவமான
உன் நாவறட்சிக்கு
காரணம் நிட்சயமாய்
நியாயந்தானடி
அழகே.!

உன் காதல்க் கணக்கை தீர்த்தாயோ.?

உன்னை
அளவுகடந்து
நேசிப்பவன் நான்..
அதுபோல்
என்னையும் நேசிக்க மரணமாச்சும்
முன்வந்ததை அறிந்து
அகமகிழ்ச்சி..
ஆனாலும்..
என்னுயிரை
பட்டயம் பெற்ற
உன்னை பிரிந்து
இன்னும் உயிருடன் வாழ்கிறேன்
என்பது பேரதிர்ச்சி..
அட..நீ..
வலியதற்கு எனை
குத்தகைக் கிரையம் செய்து
முடிவு நாளில்..
மரணமதுதனிற்கு
அடிமையாய் கொடுத்து
உன் காதல்க் கணக்கை தீர்த்தாயோ.?

வியாழன், 30 ஜூலை, 2015

-- அன்பில் வறுமையின்று--


ஒவொரு நாளும் 
விடியும் பொழுதுகளில் 
நாம் நேசிபவரின் 
அன்போடு, 
அரவணைப்பாய் 
நாலு வார்த்தைக்காய் 
ஏங்கி.. ஏங்கியே.. 
-நாள்- 
இருண்டு போகிறது 
முடிவில் !

--கண்ணீரோடு..!


நாம் 
நேசிக்கும் இதயம் 
நம்மைவிட்டு 
இன்னொருவரை நாடும் 
அந்த தருணம்தான் -

''மரணத்தின் வேதனை'' 
ஒன்றும் 
''வாழ்கையின் வலி''களைவிட 
பெரிதல்ல 
என்று புரிகிறது
கண்ணீரோடு..!

~சீ..சீ..~


நேற்றைய நாளில் 
கழற்றிவிடும் 
காதலிகள்..

''எப்போதும் உனக்கு 
நல்ல நண்பியாய்'' 
இருப்பேன் - என்று 
வார்த்தைகளில் 
முலாம் புசிய 
காலம் கடந்து..! 

இன்று... 

சில வாழ்க்கை
துணைவிகளும்
அதே வார்த்தைகளால்
அமிலம் பூசும் 

அந்திக்காலத்தில்

கடமைக்காய் 

காதலும் - கலியாணமும்
என்றாகிப்போனது...!!

-- பலவீன இதயத்தார் பத்திரம் .!


இந்த உலகில் 
மரணமற்ற ஜீவனை 
தேடுவதும்,

நிலையான அன்பை 
ஒருத்தரிடம் 
எதிர் பார்ப்பதும்,

இங்கு சாத்தியமற்றது.!
ஆகையால் உங்கள்
இதயம் பத்திரம்
உறவுகளே..!

காதலா.!


நான் மகாத்மாவோ..
நீ என் பாதை வாஞ்சகனோ அல்ல,

நான் அரசியல் தலைவனும்..
நீ எனக்கு தொண்டனுமோ அல்ல,

நாம் முண்டாசுக்கவி பாரதி காலத்து 
பழஞ்சம்பிரதாய தம்பதியும் அல்ல,

இருந்தும்..
உனக்கு ஏதுமெனில்..
நானும் இறைமகனாவேன் என்றாயே.! 
இதுதான் காதலா.? 
' என் காதலா '

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...