திங்கள், 13 அக்டோபர், 2014

நீ நலம் தானே...?

சொந்த பெயரில்
ஜடமாய் என்னை உலவவிட்டவளே.. 
உன் உறவை திருப்பி தருவாயா ?
இல்லை உயிரை அறுத்து விடுவாயா ? 
புலம் அறியாது புலம்புகிறேன் - கண்ணே.. 
நீ நலம் தானே...? 

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

வெற்றிக்கும் எனை பிடிக்கும் !

தோல்விக்குமேல் தோல்வியை சந்தித்தால்
எனக்கு இன்று இனம் புரியாத பிடிப்பு பற்றிக்கொண்டது
வெற்றியையும் சந்தித்தே ஆகவேண்டும் என்று !
நிச்சயம் வெற்றிக்கும் எனை பிடிக்கும்
என்று நம்பியே நாட்களை  நகர்த்துகிறேன் !

சனி, 4 அக்டோபர், 2014

நீ இன்றி..???


மேன்மையான தருணம்...


நான் பாவம் !


இனிய நெருடல்..


உடல் பிரிவில் இருந்தும் உயிர் தவிப்பில்..


மனிதனால் முடியாதது !


எம் அழகிய சாயலே..


புதன், 20 ஆகஸ்ட், 2014

ஜாலம் ...

நீ
கூடவே இருக்கும்
பொழுதுகள் அத்தனையும்
கனவும், கற்பனையும் கனிந்து
பருவம் எய்திய மங்கையாய்
என் மனக்கண்முன்னே
கலை ஜாலம் ...

உன் சுடுவார்தைகள்...


பெண்ணே... 
உன் கோபம் சுமந்துவரும் 
சுடுவார்தைகள் 
ஒவ்வொன்றில்தானும் 
தலைகனத்த கவிவரிகள் 
தமிழிற்கு தலைவாரி பூச்சூடி 
அலங்கரித்து 
என்னையும் கவிதாசனாய்
அரங்கேற்றம் செய்கிறது... 
உன்னை கட்டியணைக்க 
தாமதிக்கும் அந்த நொடி வரையில் ! 

***


சிரஞ்சீவி காதல் !


தொடங்கும் காதல் எல்லாம் 
தொடும் முடிவு நிச்சயம் 
என்பது பொதுமையாய் இருக்க ! 

என் காதல் மட்டும் 
மாற்றாதாரமாய் 
உன் மடி தாங்கியே 
நீழுதடி மனையாளே... 


என்னவளால்>>>


''உன்னை காதலிக்கிறேன்''..
              (I Love you..)
என்ற ஒரு வார்த்தைக்கு
என் ஆயுளில்
ஒரு நாளிகையாச்சும்
கூடுமென்றாலும் 
இன்னளவும் 'இந்திரனின்' ஆயுளை
இருமடங்கால் மிஞ்சியிருப்பேன்
இவளால்..


கண்ணுக்குள் நீயிருக்க...


கண்ணுக்குள் நீயிருக்க...

கண்ணுறக்கம் காணலடி;
கண்ணீரும் ததும்பலடி  !

ஒத்தையா நான் தேடனுமே 
உள்ளிருந்து  நீ விழுந்தா ?! 

நீயில்லை என்ற பின்னே..


நீயில்லை என்ற பின்னே
நினைவென்னடி..?
நிஜமென்னடி..?
இனி எல்லாமே நிற்கதி தான் !

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

என் காதலியே..


உனக்குள் உறைந்த
உன் காதல்
அணுக்களிற்கு
உரைநடை எழுத வந்த
முதல் கவிஞன் நானடி
என் காதலியே..

கடிவாளமே !


உன் 
புன்னகைக்கு பொருளென்ன  
இனிய காதலா..?
இல்லை -
நான் சாதலா ?

ஒரு முறை 
சிறு பதிலொன்று 
சொல்லடி... 
எனை சமைத்த 
புனித கடிவாளமே !


தவிக்குதடி..


சிட்டான என் மனசு
உன் பட்டாம்பூச்சி கூண்டில்
தங்கிட தவிக்குதடி
பெண்ணே..!?


நீ வந்த பின்னே !

நித்திரைக்கும்
விளித்திரைக்கும்
உறவில்லயடி பெண்ணே..
என்னுளே நீ வந்த பின்னே !

புதன், 13 ஆகஸ்ட், 2014

நான் தோற்றபோது..!


நேற்று கூடவே இருந்தவர்
இன்று எதிரிகள் ஆகி;
காலையில் சுகம் கேட்டவர்
இரவுபோழுத்தில் துரோகி ஆகி..


பல நண்பர்களிற்கு
என் பெயர் மறந்து போனது;
என் உறவினர்களிட்கு
என் முகவரி மறந்து போனது..

கடந்த நாளிகையில் கட்டியணைத்தவர் நகரும் நிமிசமே
மீதியையும் களவாடி மறைந்தனர்..



உன்னை என்றும் கைவிட மாட்டேன்
என்று கைபிடித்த  உறவிற்காய்
கோவணம் வரையில் பட்டா கொடுத்துவிட்டேன் -

அந்த  கைபேசியும்
பதிலற்று ஊமையாகி போனது
விரைவில் தொடர்பு எல்லையை தாண்டிவிடலாம்
என்கிறது பட்டறிவு..!

உதவி என்று ஒரு வார்த்தை கேட்டால்
உள்ளவரும் நடுத்தெருவிற்கு வந்துதான்
மறுவார்த்தை பேசுகிறார்..

எனக்கு கடன் பட்ட அத்தகையோர்
கூழுக்கும் வக்கத்ததாய்
சோர்ந்தே பதில் பேசுகிறார்..

இறுதியாய் நான்
வாழ்ந்து கெட்ட அனுபவத்தோடு
மீண்டும் வாழ்கையின் மீதியை  பார்த்துவிட  துணிந்துவிட்டேன் !


திங்கள், 11 ஆகஸ்ட், 2014

நான் சாவதில்லை !


என்னை நான் தேடுகிறேன்
வெகு நாட்களாய்...
இந்தப் பயணம் முடிவுறும் நாளின் ஈற்றில்
நிட்சயம் உயிர் வாழ்வேன் !

காரணம்..

எனது எதிர்பார்புகளும்..
நம்பிக்கைகளும்..
என்னை பலமுறை கைவிட்ட போதும்
எனது லட்சியம் மட்டும்
உள்ளே செத்துவிடவில்லை...

ஆதலால்தான் சொல்லுகிறேன்
என் லட்சியங்கள்  வாழும்வரை
நான் சாவதில்லை !

நல்ல நண்பன்..


நல்ல நண்பன் ஒருவன் போல
ஆயிரம் சொந்தங்களும், 
உறவுகளும், 
ஏன் மனைவியும் கூட 
துணைக்கு வரார்கள் !

மீட்டிபார்கிறேன்..

நான் 
சிரித்த நாட்களையும்...
அழுத நாட்களையும் 
மீட்டிபார்கிறேன்..

சிரித்தபோது -
என்னுடன் இருந்தவர்கள் 
அழும்போது பக்கத்தில் இல்லை !
அழும்போது -
ஆறுதல் சொன்னவர்கள் 
யாரும் எனுடைய உறவினர்கள் இல்லை !


தனியேயும் வாழலாம்..!


உன்னுடைய 
எதோ ஒன்றை 
எதிர்பார்த்து ஒட்டிக்கொள்பவர்கள் 
அது இல்லை என்று ஆனதும் 
விலகி விடுகிறார்கள்..

அதில் உடன் பிறந்த சொந்தம்,
கூடவே வருவேன் என்று சொல்லும் 

உன்னில் பாதியான பந்தம்,
சில தாய், தந்தையர் கூட

விதி விலக்கல 
ஆனால்..
உன்னுடன் எப்போதுமே 

பிரியாத அந்த ஓன்று
நீ என்கிற நீதான்..


ஆகவே.. 

தன்னம்பிக்கை 
அதுதனை இழந்துவிடாதே...
தனியேயும் வாழலாம்..!
 

நாளை ?


நாளை... 
பற்றிய கவலை எனக்கு- 

இல்லவே இல்லை..
காரணம்..

நாளைய நாளில் 
நான் இருபேன் என்று
இதுவரை
எவரும் எனக்கு
படைய உறுதி
தந்திடவில்லை...!

நேற்றைய எதுவும்
இன்று நமகென்று
இல்லை;
இன்றைய எதுவும்
நமக்கான நிரந்தரம்
இல்லை;

பிறகு எதற்கு
''நாளை'' என்ற பேச்சு ?

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

இலட்சியங்கள்..


 நமது                             
இலட்சியங்கள் 
உயார்ந்ததாக 
இருக்கும் போது... 
நாம் 
சாமானிய சக மனிதன்
போலல்லாது 
சிந்தனையிலும்; 
ஆற்றலிலும்.. 
மாறுபட்டு நிற்கின்றோம் !
ஆதலால்
காலங்கள் சில காத்திருந்து
 கூடவே 
கஷ்டங்களையும் 
சந்தித்தே ஆகவேண்டும்... 

கடவுளும் மனிதனும் ?!

                     

                                                                                 











திகற்றபோது.. 
தெய்வமே.. தெய்வமே..
என்று 
பக்தி புலம்பும் 
மனிதன்..

குருதிசை 
கண்டதும் 
''கடவுள்.. மதம் 
என்பதெலாம் 
நேற்றைய நாம் 
நமக்காய் உருவாகிய
வெற்றுப் பாத்திரங்கள்'' 

என்று வேதாந்தம் 
பேசும் வேளைகள்தான் 
புரிகிறது.. 

காசுதான் பிரபஞ்சத்தின் இன்றைய கடவுள் என்று ! 
கடவுளே...
நீர் பெரியவர் !

***

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...