நெஞ்சிலாடும் நிலவே
தஞ்சம் நானானேன்தயவே உன்மடி
~*~
துஞ்சும் என்னுயிர்
துளியுன் கண்ணீருக்கும்.!
வஞ்சிக் கொடியே
வாழ்வே நீதான்.!
துளியுன் கண்ணீருக்கும்.!
வஞ்சிக் கொடியே
வாழ்வே நீதான்.!
~*~
தகையாய் நீயெனக்கு
தெய்வம் கொடுத்தவரம்
நிழலுக்குள் ஒழிந்தவனை
நிஜத்திலே புதுப்பித்தாய்
தெய்வம் கொடுத்தவரம்
நிழலுக்குள் ஒழிந்தவனை
நிஜத்திலே புதுப்பித்தாய்
~*~
ஒளிபடரும் சந்தமே
நிந்தனில் நிலையானேன்
வடிவழகே நலமுனது
நெஞ்சமும் நினைவுகளும்
நிந்தனில் நிலையானேன்
வடிவழகே நலமுனது
நெஞ்சமும் நினைவுகளும்
~*~
கொஞ்சி விளையாட
மைந்தனைக் கொடுத்தவளே.!
எதுவொன்றும் பெரிதல்ல
உன்னன்பின் நெடுவானிலே.!
மைந்தனைக் கொடுத்தவளே.!
எதுவொன்றும் பெரிதல்ல
உன்னன்பின் நெடுவானிலே.!
~~~~~~~***~~~~~~~~
வரிகள்: சிறீ அருணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக