என்னுருவை
உருக்கிவார்த்த
முதற் பலனே
உயிருறை செல்வமே!
*
நானிருக்க
உன்னைத் தொடுமோ
கண்ணூறும் நாவூறும்?
*
“அப்பா..”
என்ற ஒற்றை வார்த்தை
இத்தனை கனத்ததென்று
நீ கூப்பிடும்வரை அறிந்திரேனே!
*
உன்னைத் தாலாட்டக்
கோர்க்கும் வரிகளில்தான்
உள்ளார நம்புகிறேன்
நானுமொரு கவிஞனே.!
*
சுயநலக்காரன்
இவனென்ற ஊரார்
புறணிகள் பொய்யாயிற்று
தலைமகனாய் நீவந்ததால்..
*
உன்னோடு
வாழ்வது உவப்பானதே - என்று
கொண்டாடித் தீர்க்கிறேன்
உறவுகளோடு நித்தம்
*
பேறுகாலவலி
மரணத்திலும் கொடிதெனல்
உண்மைதானோ??
தூரத்தில் உன்னழுகை!
***
வரிகள்: சிறீ அருணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக