பகட்டில் பரவசப்படும்
பரமின்று பாரீரோ ?
கொடுக்குங் கோமகரே
கோரமுகம் காட்டாதீர்..
வீணான விளம்பரத்தில்
விடைகாணும் வீணராய் !
வகைதேடும் வக்கத்தவன்
வலியென்ன அறியீரோ ?
விருப்புக்குறி வினவுகிறீர்
வீதிமகன் விற்றவயிற்றிலோ ?
நாதியற்ற நம்மவர்க்கு
நாமின்றி நலமேது ?
சாதிசமயஞ் சாராது
சார்ந்திடுவீர் சமையத்தே !
தேதியென்று தேவயற்ற
தேறாச்சாத்திரம் தேடாதீர்..
கொடுத்துக் கொண்டாடுவோம்
கொடைக்கேது கொள்கையிங்கு ?
இடதுகைதானும் இயம்பாத
ஈகையே இனிமையென்று.
~~~~~***~~~~~
வரிகள்: சிறீ அருணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக