திங்கள், 6 ஜனவரி, 2025

வாழ்க வையகம்


வாழ்க வையகமெனச்

சித்தங் கொண்டவர்

சித்தார்த்தன் அவர்தாம்

புத்தனாய் அவதாரம்


அரசபோகம் ஒதுக்கியே

ஆண்டியாய்க் கோலம்

நீளும் சீவியத்தில்

நீட்சியில்லா அன்பால்


வாழும் மனிதர்குலம்

நிலைத் திடனாகவே.!

பேசும் வார்த்தையிலே

இங்கிதம் காத்தவராம்


கொல்லவந்த துஷ்டனை

சீடனாக்கிக் கொண்டே.!

ஞானம் கொடுத்தது

போதிமரம் அல்லவே.!


போதிமரத்தின் கீழமர்ந்த

அவரேதான் ஞானவானாய்

போதனைகள் சாங்கியமாய்

ஓதுதற்கல்ல ஒழுகுதற்கே.!


அவர்வழி இலங்கையர்  

அதுமறந்த நெஞ்சோடு..

பெளத்தமத ஆணிவேரே

தர்மமென அறியாரோ.?


~~~~~~***~~~~~~

வரிகள்: சிறீ அருணன்




கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...