திங்கள், 6 ஜனவரி, 2025

பழுதிலா வாழ்வே பலம்.!



(வெண்சீர் வெண்டளை)

பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு
பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம்
அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள்
பழுதிலா வாழ்வே பலம்.!

~~~~~~~***~~~~~~

வரிகள்: சிறீ அருணன்



சூழ்நிலைக் கைதி


சூழ்நிலைக் கைதியாய்ச்

சுழலிலே நாதியற்று


ஆதரவற்ற தனிமையில்

கதைபேசிப் பயனில்லை/


விதியைக் கடிந்து 

தலையெழுத்தை சபிக்காதீர்/


தடுக்கிப்போன காரணத்தை

கருத்தாய்க் கற்றுக்கொள்/


வென்ற துரோகியும்

மன்னனான வரலாறுண்டு.!


தோற்ற நாயகனுக்கு

பரிந்துபேசிய தடையமேது.?


சாதித்தால் வரலாறு 

உனக்காய் நிலைநிற்கும்/


சிரத்தையாய்ப் போற்றும் 

தூற்றிய நாவுகளும்/


குணசீலன் பெருமகன்

நீயாவாய் சமூகத்தில்/


உற்றவரும் சுற்றவரும்

உவகை காண்பர்/


சூழ்நிலைக் கைதியே

தூங்காதே போராடு.!/


~~~~~~***~~~~~~


சூழ்நிலைக் கைதியாய்ச்

சுழலிலே நாதியற்று


ஆதரவற்ற தனிமையில்

அவலமான கதைபேசிப் 

பயனேது.?


சுமைதாங்கிக் 

கழுதையும் சுமையிறங்கிச் 

சுகங்காணுதல் நிச்சயம்


விதிகடிந்து விட்டதெனத்

தலையெழுத்தைக் குற்றங்கடிந்து

நியாயமென்ன.?


தடுக்கிவிட்ட காலந்தனை

கருத்தாய்க் கற்றுக்

கனிந்துகொள்


வாகைசூடும் 

ஐந்தாம் படையனுக்கும்

முடிசூட்டும் விந்தையான 

மாந்தரிங்கு.!


தோற்றுவிட்ட நாயகனை

விழுங்கிச் செரித்த 

வேதங்களும் நமக்குண்டு.!


வென்றுவிடு அதுபோதும்

அநியாயங்களுக்கும் வரலாறு 

நியாயங் கற்பிக்கும்.!


செம்மை யுற்றானிவன் - என்று

சிரத்தையோடே போற்றிப் 

புகழுஞ் சரிதங்களுனை


தன்மை மாறாக் 

குணசீலன் தற்பெருமை 

பேசாப் பெருமகனென்பர்

தூற்றித் தூசித்தோர்


உற்றவரும் சுற்றவரும்

உவகை காண்பார்

உன்பேரில் நலமானதை


இவ்வரிகள் 

இலக்கோடும் வெற்றிக்கல்ல

சூழ்நிலைக் கைதிக்கேர் 

சுகச்செய்தி.!


~~~~~~***~~~~~~

வரிகள்: சிறீ அருணன்




தோல்வி - போராடி - வென்றிடு

#தோல்வி போலொரு

தோழனில்லை கற்றுத்தர.!


அற்பமாய் எண்ணப்பட்டவர்

அதிசயங்கள் புதிந்ததுண்டே.!


வெளித்தெரியா வேர்தானே

விசாலத்தின் ஆதாரம்


களிப்புடன் கடந்துசெல்

கண்ணியமற்ற மாந்தரை


புகழைக் கொண்டவன்

#போராடி வாழ்ந்தவனே.!


துக்கித்துத் துவள்பவன்

தோற்றான் என்றாகும்


துரோகத்தின் முகட்டில்

துணிவதே ஆயுதம்


வெட்கம் அவமானம்

வேதனைகள் வெறுவார்தையாம்.!


உறுதியாய்ப் போராடி

உலகிதை #வென்றிடு


~~~~~~***~~~~~~

வரிகள்: சிறீ அருணன்

கொடை பழகுவீர்.!



பகட்டில்  பரவசப்படும்

பரமின்று  பாரீரோ ?

கொடுக்குங்  கோமகரே

கோரமுகம்  காட்டாதீர்..


வீணான  விளம்பரத்தில்

விடைகாணும்  வீணராய் !

வகைதேடும்  வக்கத்தவன்

வலியென்ன  அறியீரோ ?


விருப்புக்குறி  வினவுகிறீர்

வீதிமகன்  விற்றவயிற்றிலோ ? 

நாதியற்ற  நம்மவர்க்கு

நாமின்றி  நலமேது ?


சாதிசமயஞ்  சாராது 

சார்ந்திடுவீர்  சமையத்தே !

தேதியென்று  தேவயற்ற

தேறாச்சாத்திரம்  தேடாதீர்..


கொடுத்துக்  கொண்டாடுவோம்

கொடைக்கேது கொள்கையிங்கு ?

இடதுகைதானும்  இயம்பாத

ஈகையே  இனிமையென்று.


~~~~~***~~~~~

வரிகள்: சிறீ அருணன்

அர்த்தமுள்ள புத்தாண்டு




விலைபோகும் விஞ்ஞானம்

விவசாயத்தை வீணென்றது

நற்காரியமாய் நிதைத்தவை

நன்மைக்கே நட்டமானது


தகமைக்குத் தரணியில்

தகுந்தவேலை தருவாரில்லை

கடந்தகாலக் கனவுகள் 

கடனிலே கரைசேர்த்தது


உடனிருந்த உறவுகள்

உதறித்தள்ளி ஊமையானது

இத்தனைக்குமிது அர்த்தமுள்ள

புத்தாண்டென நம்பிக்கையில்.!


~~~~~~~***~~~~~~~~

வரிகள்: சிறீ அருணன்

வாழ்க வையகம்


வாழ்க வையகமெனச்

சித்தங் கொண்டவர்

சித்தார்த்தன் அவர்தாம்

புத்தனாய் அவதாரம்


அரசபோகம் ஒதுக்கியே

ஆண்டியாய்க் கோலம்

நீளும் சீவியத்தில்

நீட்சியில்லா அன்பால்


வாழும் மனிதர்குலம்

நிலைத் திடனாகவே.!

பேசும் வார்த்தையிலே

இங்கிதம் காத்தவராம்


கொல்லவந்த துஷ்டனை

சீடனாக்கிக் கொண்டே.!

ஞானம் கொடுத்தது

போதிமரம் அல்லவே.!


போதிமரத்தின் கீழமர்ந்த

அவரேதான் ஞானவானாய்

போதனைகள் சாங்கியமாய்

ஓதுதற்கல்ல ஒழுகுதற்கே.!


அவர்வழி இலங்கையர்  

அதுமறந்த நெஞ்சோடு..

பெளத்தமத ஆணிவேரே

தர்மமென அறியாரோ.?


~~~~~~***~~~~~~

வரிகள்: சிறீ அருணன்




பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...