வெள்ளி, 1 டிசம்பர், 2017
திங்கள், 16 அக்டோபர், 2017
வழக்கை சதுரங்கம் !
நான் வரும்போது
கேட்டு வந்ததாய்
ஞாபகம் இல்லை
என் தாய், தந்தையை
இன்னாரெண்டு...!
எனக்கு சகோதரிகள்
இவ்விப்படி என்று
எனைப்பெற்றோர் அனுமதி
கேட்டதில்லை..
இப்படித்தான்
நானாவேன் என்றும்
என் ஆசான்கள்யாரும்
சொன்னதுமில்லை..
இவள்தான் என்னோடு
இறுதிவரை சயனிப்பவள்
இவளின் மெய்யுணர்
என்னில் ஏதானது
என்பதை என்னால்
தப்பிதம் காணவும்
இயலவில்லை..
ஓரிரு காலம் உருண்டோட
மருண்டிருத்த மனசு
விழித்தகணம் அழுதது
ஒப்பாரி ஓலம் !
ஒரு சாவிலும் கொடூரமான
சாபம் என்னிதயத்தில்
சர்ப்பமாய் சுற்றி
சாக ஒப்பாது - சகிக்கவும் கேட்காது
சரீரம் சடமாய் அலைவது கண்டு
பின்ப்பிரபஞ்சம் காசு பற்றாது
கணப்பொழுது தாணும்
எனைச் சுமக்க
திராணியிலாதது என்பதில்
என் ஆத்துமா
அளவற்ற திண்ணமானது
அதன்பெயரில்
நன்னிலம் பற்றி
நானும் தெம்புக்காண..
நம்பி நம்பியே
ஏத்திழியரின் வசிய வார்த்தைகட்கு
என்னிதயம் ருசியானது
வயசுக்குள் மட்டுப்படாத
வழக்குகளும்-இழுக்குகளும்
அடுக்கடுக்காய் பா(ர/வ) சுமையானது !
உறவுகள் என்று சொல்லியும்
சில கொழுத்த முதளைகள்
என் வியர்வையும் குருதியும்
கலந்த சம்பாத்தியந்தனை
சகசமாக சவட்டிக் கொண்டார்கள்
ஊராரை நம்பமறுக்கலாம்
உற்றானையுமா நம்பலாகாது ??
இதயம் இறுகிப்போனது - இந்த
உடன் மனையாளோடு
உயிற்ற காசுக்காய்
மாற்றான் சயனிக சம்மதிக்கும்
சாக்கடை மனிதர் மீதினில்
சஞ்சரிப்பது அத்தனை
சுலபமாயிடுமோ ?
இருந்தும்...
எனில் நானறிந்த
இயலுமை - இயலாமை,
ஏமாற்றம் தந்த
எண்ணொண்ணா அனுபவங்கள்,
வழிகள் சொன்ன வலிகள்
அதற்கன ஒளஷதங்கள்,
மனிதரை புரிந்துகொள்ளும் ஜாலம்,
சொசு கிட்டினால்
கொஞ்சம் சோகம் மறந்த ஆறுதல்,
புழுதியில் தூற்றினாலும்
ரோஷம் தொலைத்த புன்னகை,
தாங்கொண்ணாக் கோபங்கள்
உள்ளிருந்தும் நிறைமாதக் கர்ப்பிணியின் தவம்,
நிஜம் தெரிந்தும்
நிழலை நம்புவதான பாவனை
இத்தனையோடு..
மாற்றுப் பாதை புரியாது
மாற்றம் வேண்டி அலைகிறேன்
என் துணையவளோடு துணிகரமாக..
''கண்போனால் என்ன ?
கையிருக்கிறது !
தடவித் தடவியாச்சும்
கடந்து செல்வேன்
எனக்குரிய நாள் வரும்வரையில்''
ஆக.. நன்றி இறையானே.
ஸ்ரீ-ஆரோன்
கேட்டு வந்ததாய்
ஞாபகம் இல்லை
என் தாய், தந்தையை
இன்னாரெண்டு...!
எனக்கு சகோதரிகள்
இவ்விப்படி என்று
எனைப்பெற்றோர் அனுமதி
கேட்டதில்லை..
இப்படித்தான்
நானாவேன் என்றும்
என் ஆசான்கள்யாரும்
சொன்னதுமில்லை..
இவள்தான் என்னோடு
இறுதிவரை சயனிப்பவள்
இவளின் மெய்யுணர்
என்னில் ஏதானது
என்பதை என்னால்
தப்பிதம் காணவும்
இயலவில்லை..
ஓரிரு காலம் உருண்டோட
மருண்டிருத்த மனசு
விழித்தகணம் அழுதது
ஒப்பாரி ஓலம் !
ஒரு சாவிலும் கொடூரமான
சாபம் என்னிதயத்தில்
சர்ப்பமாய் சுற்றி
சாக ஒப்பாது - சகிக்கவும் கேட்காது
சரீரம் சடமாய் அலைவது கண்டு
பின்ப்பிரபஞ்சம் காசு பற்றாது
கணப்பொழுது தாணும்
எனைச் சுமக்க
திராணியிலாதது என்பதில்
என் ஆத்துமா
அளவற்ற திண்ணமானது
அதன்பெயரில்
நன்னிலம் பற்றி
நானும் தெம்புக்காண..
நம்பி நம்பியே
ஏத்திழியரின் வசிய வார்த்தைகட்கு
என்னிதயம் ருசியானது
வயசுக்குள் மட்டுப்படாத
வழக்குகளும்-இழுக்குகளும்
அடுக்கடுக்காய் பா(ர/வ) சுமையானது !
உறவுகள் என்று சொல்லியும்
சில கொழுத்த முதளைகள்
என் வியர்வையும் குருதியும்
கலந்த சம்பாத்தியந்தனை
சகசமாக சவட்டிக் கொண்டார்கள்
ஊராரை நம்பமறுக்கலாம்
உற்றானையுமா நம்பலாகாது ??
இதயம் இறுகிப்போனது - இந்த
உடன் மனையாளோடு
உயிற்ற காசுக்காய்
மாற்றான் சயனிக சம்மதிக்கும்
சாக்கடை மனிதர் மீதினில்
சஞ்சரிப்பது அத்தனை
சுலபமாயிடுமோ ?
இருந்தும்...
எனில் நானறிந்த
இயலுமை - இயலாமை,
ஏமாற்றம் தந்த
எண்ணொண்ணா அனுபவங்கள்,
வழிகள் சொன்ன வலிகள்
அதற்கன ஒளஷதங்கள்,
மனிதரை புரிந்துகொள்ளும் ஜாலம்,
சொசு கிட்டினால்
கொஞ்சம் சோகம் மறந்த ஆறுதல்,
புழுதியில் தூற்றினாலும்
ரோஷம் தொலைத்த புன்னகை,
தாங்கொண்ணாக் கோபங்கள்
உள்ளிருந்தும் நிறைமாதக் கர்ப்பிணியின் தவம்,
நிஜம் தெரிந்தும்
நிழலை நம்புவதான பாவனை
இத்தனையோடு..
மாற்றுப் பாதை புரியாது
மாற்றம் வேண்டி அலைகிறேன்
என் துணையவளோடு துணிகரமாக..
''கண்போனால் என்ன ?
கையிருக்கிறது !
தடவித் தடவியாச்சும்
கடந்து செல்வேன்
எனக்குரிய நாள் வரும்வரையில்''
ஆக.. நன்றி இறையானே.
ஸ்ரீ-ஆரோன்
சனி, 9 செப்டம்பர், 2017
உலக பந்தம்.!

விந்தணுக்களோடு
முட்டைக்குள் கருவாகவுருவாக
அண்டா, குண்டா, பணம் கொடுக்காது
சுயேட்சையாகனின்று மந்திரியானேன் !
*
கையடித்து..காலடித்து..
குப்புறவிழுந்து..
நக்குழுவித்.. தவழ்ந்து..
தத்தித்.. தத்தி.. பின் நடந்து..
ஓடியாடி சிறுபராயம் கடத்தி
தாய், தந்தை, ஆசானின்
கண்டிப்பும் கடுங்காப்பும் தளர்ந்து
ஒருபாடாய் வாலிபம் எட்டினேன்.!
*
அங்குமொரு
நுண்ணுயிராய்க் கூட
பிறப்பெடுக்காத நூதனமான
உறுநோய் எனக்குள் நுழைந்தது
*
அது இதயத்தின் உட்புறத்திலொரு படபடப்பு
புத்திக்குள் புதியதோர் பேதலிப்பு
என் நடையுடை பாவனையில்
நானறியாத மாற்றங்கள் - என்று
பல்லாயிரம் பக்கவிளைவுகளை பரிசளித்து !
*
ஐந்தாண்டின் முடிவில்
அரசியல்வாதிப்படும்
அவஸ்த்தை அத்தனையும்
ஒரேநாளில் கண்டுகொண்டேன்
அவளை கண்ட அந்த நிமிசம்.!
*
ஆண்டொன்றின் முடிவில் மீண்டேன்
அவள் மனதெனும் புனிதக்கொட்டகையில்
நான்மட்டுமே உட்கார
அவஸ்தைகளிட்கு நடுவிலும்
அவள்மனதில் என்சுயதச்சன் செய்த
காதல் நாற்காலி
கம்பீரமாய் இருபதுக்கண்டு !
*

அறிவுடையார் ஆவ தறிவார்
அறிவிலார் அஃதறி கல்லா தவர்
என்னும்பொருள் வள்ளுவதிருமூதா
வாக்கின்பால் அவளையே கையேகி..
*
காத்திருக்கிறேன் - இன்று
என் தந்தை பனிரெண்டாயிரத்து
நாற்பத்து ஐந்து நாட்களுக்கு முன்
என்வரவிற்காய் வெற்றுக் கையிரெண்டில்
காந்தப்புலமுரசி சூடு கண்டதுபோல்
நானும் என் வாரிசுக்காய்.!
வரிகள்:
ஸ்ரீ ஆரோன்
வெள்ளி, 1 செப்டம்பர், 2017
❤ காதல் ❤

மனிதத்தின்
பெயர்தான் ''காதல்''
இது குருதி சிந்தாது
மனிதன் தன்னை பிறநிட்க்குள்
உணரும் புனிதமான முயற்ச்சி..
❤
ஆதாமும் எவாழும்
அணுவால் உருப்பெறாத
மகாஅண்டப் பிரவாக
வார்த்தைதான் ஆதாரம்
❤
இது உறவுகளில்
உருவமில்லா உயிருணர்வு
வார்த்தைகள் சொல்லாத
பொருளத்தனையும்
இதுதரும் வலியின் வீரியம்
சொல்லிவிடும்
❤
இது ஆத்மார்த்தமான
அன்பின் இனொரு நாமம்
ஐம்புலங்களற்றும் ஆத்மாவை
ஒரு பிண்டத்திட்க்குள்
அடக்கிவைக்கும் மந்திரச்சொல்
❤
ஐயும்பூதங்களையும் அடக்கி
மந்திர மாந்திரீக - மெய்ஞ்ஞானம்
எந்திர தந்திர - விஞ்ஞானமில்லாது
எந்தவொரு ஜீவனும்
அண்ட சராசரங்களையும்
அமானுஸ்ய சஞ்சாரங்களையும்
தாண்டிப் பயணிக்க எத்தனிக்கும்
ஒரேயொரு பரம வார்த்தை
இதுவொன்றுதான் இங்கு.!
❤
ஒன்றுகூடும் இயற்கயின்
ஈடிணையற்ற வரம் - இது
ஜீவன் உடலிட்க்குள்
இருந்தும் - இறந்தும் பரம்பரிக்கும்
நாமிட்ட சுவடுகளை - நாளை
வரலாற்றுக் காவியமென்று.!
❤❤❤
செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017
காதல் புரட்சியாளன் நான் !
அழகிய ''லெனின்கிராட்'' நீயானபோது
ஆரோன் -ஸ்டாலின்தான் நானங்கே,
நாஸிவேசத்தார் மாண்டொழியும் வரை..
காலனாவேன் கால் மாக்சின் சோசலிசம் பூண்டு.
***
என் பெண்மணியேனுன் உரிமைகள்
யாரேனும் பறித்திட்டால்
இருபத்தியோராம் நூற்றாண்டின்
சி/சீனம் கொண்ட சிலாகியன்
மாவோ சேதுங்காவேன் செங்குருதி தோய்ந்து.
***
உன் சுயமரியாதையும், சுதந்திரத்திரமும்
பறிபோகுமிடத்து பார்கோனானாலும்
பணிந்திடாது வேடம் பிரசவிப்பேன்
வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகி
என் இனியவளிட்கு ஈழம் கேட்டு.
***
சந்தன வனமான உன்தேகம் சுருங்கிட்டாலும்
அதையும் தழுவியே ஜீவித்திடுவேன்
எனக்கான எத்தனை ஜென்மமோ-அத்தனையும்
சத்திய மங்கல தமிழ்ச் சாணக்கியன் வீரப்பன்போல்
***
உன் கருங்கூந்தலிட்குள் நரைவிழுந்தால்
வயதானதென்று சமரசமாய்டேன் நெஞ்சோரம்
கருச்செம்மல் நெல்சன் மண்டேலாவாய்
காலமெலாம் போராடுவேன் கரு-மை கையேந்தி.
***
நீயென் மணாட்டியாய் இருந்தபோதும்
உனைப் ''பெண்சாதி'' என்று
வார்த்தையிலும் சாபம் பூணாத
அம்பேத்காரின் சாதி, தீண்டாமையின்
கருத்துளர் கண்ணியவான் நான்
***
என் தாத்தன் கம்பக்கவி
தமிழ் வார்த்தை ஜாலங்களில்
எவர்க்கும் ஒப்பாத பேராற்றலின்
மகாபிரளயக்காரன் ஆயினும்
''சீதையெனும்'' பாத்திரத்தை
அப்படியாய் படுத்தியதால் அப்பப்போது
எங்களுக்குள் கருத்துப்பிரளயம் கூடும்
அதுவும் உனக்காகவே தானடி .!
***
என் (இல்)லத்தின் பூமியானவளே
உனக்கான என் பட்டயம் பறிபோனால்
சேகுவேரா தோழர் வீரமேந்தி
வல்லாதிக்கம் வெல்லோண்ணாதிருப்பினும்...
உயிர் பிரியும் இறுதிக்கணமும்
உன்மடியதுதான் தஞ்சமாவேன்.!
***
ஸ்ரீ ஆரோன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பழுதிலா வாழ்வே பலம்.!
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...

-
தமிழுக்கு என்னைத் தின்னக் கொடுத்தேன் மிச்சமின்றி எச்சமின்றி! எத்தனை எத்தனை கருத்தாய் வெற்று நினைவுகளை உறிஞ்சி வரிகளாய் வடிக்கிறாள் இலக்கணமும...
-
தங்கத்தில் சரிகை நெய்து என்மேனி போர்த்துமையா, வெள்ளியில் தட்டெடுத்து என்னை நீ தாங்குமையா என்றெனை ஒருக்காலுங்கேளா இல்லாட்டியே. * கூழோ கஞ்சி...
-
மானுடர் சீக்கு அறுந்து சீருடன் சீவனம் கொள்ள ஆருட ஞ்சொல்ல சுகமேகும், கைமருந் அதுவே காயமாற்றும், பூசாரியே ஏகபரிகாரி - என்று ரணமேகிய இருள் வாழ...