சனி, 30 அக்டோபர், 2021

முட்டாட்களின் உலகமிது !

பச்சிளம் குழந்தைகட்கு சாதியின் 

பெயர் சொருகி கூடவே..

பாடசாலையின் நுழைவுப் பத்திரத்திலும்

சாதி__என்று நிரப்பிவிட்டு.! 

"சாதிகள் இல்லையடி பாப்பா"என்று கற்பிக்கும் 

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

பெற்றோர்தம் குழந்தைகள் புலனெட்ட

புறம்பேசி, அறங்கோணி

கொடுவார்த்தைகளில் கேடுபுணர,

அந்தகாரத்தின் நடையேறுகளை 

நாணமின்றி சரளம் புழங்கி,

மறந்தேனும் எவர்க்குமீணாது..

தன்பிள்ளையை ஒழுக்கசீலனாய் காணவெண்ணும்

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

நீ யார்க்கும் நற்றுணை ஈணாய்- ஆனால்

உன் பட்சத்தில் நல் ஈவு வேண்டும்.

நீ யாரையும் தேற்றிடாய்;

உனக்கு உற்றசுற்றம் வசமேக வேண்டும் .

நீதிநியாயம் நீயறியாய்- இருந்தும்

உனை அநியாயம் ஏகிட ஒப்பிலாய்- அய்யகோ..

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

எச்சில்க்கை நீண்டு நீ காக்கை விரசாய்- ஆனால்

உன்கை வானம்பார்க்க மறுகணம் நிரம்பிடனும்.

உன் துவாரக்குடம் பொற்சமானம்

பிறன் பொன்னது தெருக்களியாகிடுமோ.?

காக்கை உன்குஞ்சு பொன்னென்றால்

அன்னத்தின் குஞ்சென்ன அழுக்கா- அட

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

சீவனோடு இருக்கும் காலமெல்லாம்

வார்த்தைக்காச்சும் சுகங்கேளாதவன்- நீ

பச்சைத்தண்ணீர் தானும் உறவுகட்கு பருக்கத்தராதவன்- நீ

இன்னான் செத்த பின்பு எதற்கு பெரும் படையலும்

பூப்பாடையும், ஓலமிட்டு முதலைக் கண்ணீரும் சொரிகிறாய்.?

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

ஓடியோடி உழைத்து, உண்ணாது உறங்காது

உத்தமமாய்ப் படிக்கவைத்த பிள்ளைகளை

கண்டவரின் கால்பிடித்து தூரதேசம் அனுப்பிவைத்து

சாவையும்.. வாழ்வையும்.. தொலைபேசியில் அனுபவித்து

காகிதக்காசைக் கட்டிப்பிடித்து நீயுறங்கி;

ஊரெல்லாம் வாய்கிழிய பெருமைபேசி என்னப்பயன்

உன்சாவுக்கு வராத உறவால்?

முட்டாட்களின்  உலகமிது !

<<>>

அழுகையின் குரல் நான்.!

(இந்த ஓவியம் 2001ல் எனது கைவண்ணத்தில் வரையப்பட்டது)

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
கற்றோர் பலர் சொன்னார்
பட்டம் பெற்றால் சீருற
எதிர்காலம் கிட்டுமென்று - ஆனால்
கிணற்றுத் தவளையாய் நானாகி
ஐந்து வருசங்கள் அனாமத்தாய் கழி(த்/ந்)துதான் மிச்சம்.
          ***

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
கல்விக் கடன்தனை
அரசு தள்ளுபடியில் மூச்செடுத்து
பட்டதாரிச் சான்றிதள் காவிநிறமுமாச்சு;
நேர்முக்கப் பரிட்சைகள் அத்தனையும்
மறைமுகமாய் கனிகிறது இங்கு- நான்
''காலத்தில் விளையாத நிலமும் தரிசுதான்''
என்று கற்ப்பித்ததும் இந்தக் கல்விதானே?!
          ***

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
பெற்றோர் உற்றார் யாருமிவர்
எத்தொழில் நற்றுறச் செய்கினும் அதுபுகினும்
நற்சீவியந்தனை என்றுபாரார்- மாறாய்
நாம் கையிடும் அங்கெலாம் "கற்றதற்கேற்ப தொழில்
கிட்டிட நீ கொடுத்து வைக்காதவனென்பர்"
சாபமாயங்கே வையகத்தில்!
          ***

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
எக்காரியத்திலும் எனை முன்னிறுத்த 
துணிவயர்ந்து உப்பிற்கு சப்பாய்
ஆலோசனை அடுக்குவர்..
வயதிற்கும் விவேகத்திற்கும் ஒட்டில்லை -என்று
பலமுறை வாதாடத் துணிவேன்
இருந்து தோல்விகளின் துறவறத்தில் 
சபையேறாது என்சத்தியம் என்றறிந்து
மனதிற்குள் தலைகுனிவேன்.
          ***

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
தட்டுத்தடுமாறி ஏதோவொரு
தொழிலிலூன்றி சீராய் ஊதியங்கிட்டி
முப்பது கடக்கும்போது.. 
அயல்வீட்டுச் சாடைக்காரி, பாடசாலை காதல்
கல்லுரிச் சல்லாபம், முறைப்பொண்ணு..
என்றெதுவுமே கிடப்பிலிராது !!
தைரியத்தை தொண்டையேற்றி இதுகான்
தாயிடம் பேசுகையில்- மறுமொழி
அதற்க்கென்ன அவசரம் தங்கை கரைசேராமல்.
          ***

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
அப்படி இப்படியாய் மணநாள் அரங்கேறி- என்
விளக்கேற்ற வந்தவரவிற்கும்- என்
தாய்க்கும் முட்டிக்கொள்ளும் அவ்வப்போது
'அரிசிக் கஜானாவில் எலிகள் புகுந்ததருணம்
போடியாரின் முகபாவனை' எனக்கு- அன்று
உண்டி சுருங்கி கொட்டாவியது கொறட்டையோடே உறவு
கூட.. இராமுழுக்க மனையாளின் புறுபுறுப்பும் அழுதகண்ணீரும்
சாமக்கோழி கூவும்வரை தொடரும்..
          ***

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
தந்தை இழப்பு, தாயினிழப்பு
நண்பரிழப்பு, சகோதரரிழப்பு-என்று
பார்த்தகணம் உள்ளாரத்தைக்கும் இதயம்
''என்னடா வாழ்க்கை இதுவென்று" இருந்தும்
மனசது முதிற்சியில் தன்னைத்தான் தேற்றிக்கொள்ளும்
'நாளை எனக்கும்' என்று நிஜாமொன்றை சொல்லி.
          ***

அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..
பெற்றபிள்ளை தாயிடம் என்னைச்
சாடைபேசும் என் காதுகேட்க..
ஏதோகாரியம் இனி நான் செய்ய/செய்யாமலிருக்க !
கேட்டும் கேளாமல் நகர்வேன்..
அன்றுமுதல் அதை ஒப்பேற்றியபடி- இன்னும்
என் மனைவி ஒரு முழுநேர வேலைக்காரியின்
தோரணையோடோ சீவிப்பாள் பேர/பிள்ளைக்காக- இறுதிவரை
ஒட்டியிருந்தது குற்றப்பட்டே ஆயுசு நகரும் இருவருக்கும்- ஆக
அழுகையின் குரல் நான்
அழக்காரணம்  இன்னதென்றறியாத
அழுகையின் குரல் நான்..

_வரிகள் ஸ்ரீ ஆரோன்_

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

அரியவர்..

அரியவர் தாமென்றும்
நிற்கும் சபையெலாம் கோலோச்சும் 
சான்றோனென்றும் தீர்க்கதரிசனமாய்- உமை
பெற்றோரிட்ட காரணப்பெயர்தான் அரியராசா- என 
தாம் வாழ்ந்தசரிதம் சொல்லிற்று எங்கள் மானசா..

யாழது பெற்று மட்டுமண் தத்தெடுத்த அரியனே;
யாழ் - சென் பட்ரிக்ஸ் கல்லுரியின் நன்மாணாக்கனே;
மட்டு - நகராட்சி மன்றத்தின் சுகாதார பரிசோதகராய் 
அளப்பெரிய சேவைகண்ட வெள்ளுடை அதிகாரியே,
நீர்சமைத்த மாணாக்கர் எத்தனை எத்தனையோ-அங்கே.!
ஓய்விலும் ஓயாது மட்டு-செலிங்கோ-லைப்ஃ ஆலோசனை நாயகனாய் எண்ணொண்ணா உள்ளங்களை கொள்ளையிட்டீர் என்று கண்டோம்- தேசமே சாய்ப்பிலிருக்க உனக்காக சொரிந்த கண்ணீரில் தெப்பமாய் உமதில்லம் சாய்ந்து நின்ற தோரணையில்!

மண்ணிற்கும் விண்ணிற்கும் 
கண்ணோக்கும் பாதையிருந்தால்- உமை
படைகூட்டி மீட்டக்க ஆயிரமாயிரம் உற்றார் சுற்றமிருந்தும் 
நீர் மறைத்துச் சென்ற புதிர் வார்தைகள், மௌனத்தின் சைகைகள், கண்ணீர்ச் சொட்டுகளிற்கும் விடைமீட்கவே இன்னும் எங்களில் 
ஞானவான் இல்லையே மீசைவைத்த குழந்தையே.

சொல்வார் சொல்கேட்டு சோடகம் பேசாது - அத்தனையும் 
உள்மனதில் அசைபோட்டு நீரெடுக்கும் ஒற்றை
முடிவிற்கு நானென்றும் கண்டதில்லை மறுப்பு இதுவரையில்
எதிர் முகங்களினின்று - அத்தனை சாமர்த்தியன் நீர் 
சமயத்தை கையாள்வதில்.

எடுத்த காரியத்தை கிடப்பில் போடாத எழுபதகவை கடந்த வாலிபன் நீரொருவரே;
உடை,நடை,பாவனையில் உமை மிஞ்சிட மன்மதனும் கோணுவான்; 
நீர் ஆறு முதல் அறுபது வரையாய் தோழர்கள் கூட்டும் மந்திரத்தின் ஒற்றை வார்த்தைதானும் நாங்கள் அறிகிலோம்.! 
கொடுப்புப் புன்னகையில் இதயங்களை கோதும் இளவேளே.

மனையாளை குழந்தையாய் கண்ட மணாளன் நீரே;
உன் முப்பெரும் தேவிய புத்திரிகளை கையாளும் கனகச்சித குயவனே; 
மருமக்கள் எம் பெருமதிப்பை பெற்றேகிய அம்மானே; 
பேரர் எட்டவேண்டிய இலக்கை வெகுமதிகளால் உற்சாகமூட்டும் காரியதரிசியே;
ஏற்ற இறக்கமின்றி உடன்பிறப்புகள், உறவுகளை நேசித்தபோதும் அன்பை பொய்முகத்தில் காட்டாது ஆழத்தே கண்டவர் நீரையா. 

தங்கள் சமயோசித புத்தி, பல்கலை ஞானமதை கிரகித்த
பல பொழுதுகளில் தங்கள் மருகனாய் புளகாங்கிதம் ஏகிநேன்; கூட
இன்னும் காதில் இரைகிறது தங்கள் அதிகாலை பாடும் தேவதுதி;
விடிந்தும் விடியாமலும் தாங்கள் அருந்தும் தேநீர் 10-ஆகஸ்டில் தற்கொலை செய்துகொண்டதாக அறிந்தேன் அங்கிள்.!

தன்மடியில் வாகைச்சாமரம் வீசி, பொன்னி வண்டுகள் தவழ தங்கள் சரீரம் துயிலும் அழகைக் காண்கிறாள் மட்டுத்தாய் - ஆக கவலையின்றி இளைப்பாறும் தேவஸ்தலத்தில் ஓய்ந்திருங்கள் மாமா.

நன்றி_
வரிகள்: ஶ்ரீ ஆரோன்
03/09/2021

வெள்ளி, 25 ஜூன், 2021

மனம்போல் வாழ்க்கை


கோயிலுக்குள் புனிதமாக
தெய்வம் இருப்பதுபோல்
நமக்குள் நற்சிந்தனை, இன்செயல்
விடாமுயற்சியும் நிலையிருந்தால் 
பக்தர்கள் கோயிலை நாடுவதுபோல 
நம்மை ஐசுவரியம் கூட நி(ன்/ம்)மதியும் நாடும்.!

மாறாக.. 
புறங்கூறல், வஞ்சகம், பொறாமை
பொய்நாவு, அவபக்தியான.. 
துர்க்குணங்கள் உளோர் ஐசுவரியனாயினும்
கோயில் அலங்கவாசலில் ஒண்டியிருக்கும்
ஆண்டிக்கு ஒப்பான தரித்திரராய் - தேவசன்னிதியில்.!

_வரிகள் ஆரோன் _

ஞாயிறு, 20 ஜூன், 2021

அப்பா நீரே..


சுழல்கள் எனை சூழ்ந்தபோது
அடைக்கலமாம் செட்டைகளால் மூடிக்காத்தீர்;
நான் அந்தகாரத்தில் நடந்தபோது
மேக, அக்கினிஸ்தம்பமாயிருந்தீர்..
*
தனிமையில் நான் அமர்ந்தபோது
என் தேற்றவாளராய் நீர் வந்தீர்;
நான் தண்ணீரை கடக்கும்போதும் 
என் கால்களை வழுவாது காத்தீர்..
*
சஞ்சலத்தில் நானிருக்க
வார்த்தைகளால் வழிகாட்டி - நான்
அறியாததும் எட்டாததுமான
காரியங்களை நடப்பித்தீர்..
*
கண்ணிகளில் சிக்குண்டு - நான் 
கூப்பிடும் போதெலாம் - எனக்கு
செவிகொடுத்து நெருக்கத்தினின்று 
விசாலத்தை உண்டாக்கினீர்..
*
"அவனை மேற்கொண்டேன்" என்று
என் சத்துருக்கள் சொன்னபோதெலாம்
கண்ணீரை துருத்தியிலே அளந்து
தாறுமாறானோரை இடலறடையபண்ணினீர்..
 *
எனக்கெதிரா பராக்கிரமசாலிகளையும்
நீர் அடித்துப்போட்டு நான் நடக்கவேண்டிய வழிகளை
எனக்கு  போதித்தீது, என்னை தள்ளாடவெட்டீர் 
 துக்கித்த நான் உம்மில் களிகூர்ந்தேன்..
*
உமது கண்ணை என்மீதுவைத்து
ஆலோசனை சொல்கின்றீர், உலகமே எனை
கைவிட்டாலும் உமது இரக்கம் எப்போதும்
தாங்கும் நான் கைவிடப் படுவதில்லை.. 
*
பாவியான் மீதும் நீர் கிருபை கொண்டீர்
என் மகா அரனும் , கோட்டையுமானவர் நீதானே; 
நீர் செய்த உபகாரங்களை போற்ற 
ஜீவனுள்ள நாளெல்லாம் சொஸ்த்தரிப்பேன்..
*
என் பாவங்களை மன்னித்த உமக்கு
சாட்சிசொல்ல ஆத்துமகாலங்கள் போதாதப்பா..
என் பெலவீனத்தில் நீரே பெலனானவர்;
எனக்குள் நீராக நான் பூரணமானேன்..
*
எனக்காக இரத்தம் சிந்திய பேறானவரே
என் செடியானவர் நீர், உமக்குள் நான் கொடியானேன்;
பிணியாளி எனை மீட் பரமபரிகாரியே
நீரே என் நித்திய வெளிச்சமானவர்;  
*
விண்ணப்பத்தை கேட்டு, எனக்காய் யுத்தஞ்செய்து  
சிறியவனும், எளியவனுமாய் புழுதியில் இருந்த எனை 
வற்றாத நீரூற்றாவும், செழித்த லீபனோபனின்
கேதுருவாய் மாற்றி ,பெரிய காரியங்களை செய்தீர்..
*
பூமியை அஸ்திபாரித்து, பூச்சக்கரத்தை கோர்த்து
உமக்குள் பெலனாய்  திடமானதாய் இருந்தோரை 
நீர் மகிமையின் சிங்காசனத்தை சுதந்தரிக்க செய்தீர் 
என் பிரயாசத்தையும் விருதாவாய் நீர் விடவில்லை..
*
புழுதியினின்று எனை உயர்த்தி - நான்
கையிட்டு செய்த காரியங்களை ஆசீர்வதித்து;
உச்சிதமான கொதுமை, கன்மலையின் தேனினால் போசித்து
என் கூடையையும், மாப்பிசையும் தொட்டியையும் நிரப்பியவரே..
*
தலைகுனிந்து இடத்திலேயே எனை நிமிரச் செய்து, 
பிரபுக்களின் மத்தியில் எனக்காய் ஒரு பந்தியை ஏற்படுத்தி;
நீர் முன்குறித்த ஆசீர்வாத அடையாளத்தை தந்து
என்னை முத்திரை மோதிரமாக மாற்றினீர்..
*
நீர் நொறுங்கின எலும்புகள் களிகூரும்வண்ணம்
ஆகாதென்று தள்ளிய கல்லெனை தலைக்கல் ஆக்கினீர்:
எனை லீலிபுஸ்பத்தை போல் மலரச்செய்து
நீர் செய்ய நினைத்தது தடைப்படவிலய ன அறிந்துளேன்.
*


 

வரிகள் ஸ்ரீ ஆரோன் 

சனி, 19 ஜூன், 2021

மீசைவைத்த தேவதை


என் ஏற்றங்களில்
கரகோசிக்கும் நண்பன்;
சோர்வுகளில் எனை 
தட்டிக்கொடுக்கும் தாய்;
நேர்மறை ஆலோசனைகளால் 
வழிநடத்திய இவரே..
என் மீசைவைத்த தேவதை
நேற்றும்-இன்றும்-நாளையும்..
அப்பா எனும் என் நீடிய ஆசான்.!  
வரிகள் ஸ்ரீ ஆரோன்     

வெள்ளி, 4 ஜூன், 2021

அகரம் இப்போ சிகரம் ஆச்சு



பிறப்பில் எவ்வுயிரும்
பிண்டத்தினுள் துடிப்பது - அதுதான்
தன் முயற்சியின் சறுக்(கல்)களில்
கைத்தாங்கல்களும்; கரகோசங்களும்
காலத்தின் ஆசானிசம் - இருப்பினும்
ஆட்டத்தினின்று கழன்றகல் - தனை
யாரும் பாறை என்கிலார் - அதுமீறி
தன்னை நிரூபித்த_அகரம்
இப்போ சிகரம் ஆச்சு !

***

தோற்றானென்று மாற்றான் கண
சரீர தோள்களில் வலிதல்லவே..
இதயத்தில் ஈறிறங்கி என்னால் 'முடியும்' - எனும்
சொல் தழுவிய ஆற்றாமையாதே.!
அஃதுதனை கழைந்தவன் தானிங்கே
கோட்டை கொடிக்கு கோமகன் - ஆக
அகரம் இப்போ சிகரம் ஆச்சு !

***

அணைக்கும் கரங்களால் தானும்
புறமுதுகு புண்படும்;
இனிக்கும் வார்த்தை ஜாலமே
சுமக்கொண்ணா துரோகந்தனை கூட்டும்;
வெளியோரு நற்பாவனையில்
உள்ளோர் சூனியச்சாடை ஒளிந்திருக்கும்;
உன்னிடம் சொல்லெடுக்கவே - தானாய்
ஒட்டிக்கொள்வர் வீணர் - அவர்
நகைப்பின் ஈரடிப்பாங்கில் சுதாகரித்து
"பீனிக்ஸ் கருகியும் உயிர்மீழ் சூட்சுமமாய்"
வாழக்கற்ற அகரம் இப்போ சிகரம் ஆச்சு !

***

நான் பட்டதும், படக்கண்டதும்..
என்பால் பெற்றதும், அனுபவத்தில் கற்ற-மற்றதும்..
உளமார உற்றதும், வேண்டாது வெறுத்ததும்..
விடமனதற்று விட்டதும், தானாய் விட்டுவிலகியதும்..
ங்கலங்கி விம்மியதும், மடைதிறந்து அழுததும்..
உள்ளாரப்பிரிந்ததும், உறவென்று பிடித்தும்..
பெற்ற பாராட்டும், பெறாத மரியாதையும்..
இழந்த தன்மானமும், இறக்காத நெஞ்சுரமும்..
ஏமாந்த நம்பகமும், ஏமாற்றாத சிந்தையும்..
நானறிந்த பலமும், எனக்கு அறியாத முகங்களும்..
எனை தெரிந்த பக்தியும், எனக்கு தெரியாத வழிநடத்தலும்..
கண்ட - இந்த அகரம் இப்போ சிகரம் ஆச்சு !

வரிகள் - ஸ்ரீ-ஆரோன்

வெள்ளி, 28 மே, 2021

(கண்)நீர் துளிகள்..

வரிகள் ஸ்ரீ ஆரோன்

நீர் துளிகள் எப்பொழுதும்

பூமியதன் வரப்பிரசவம் - அது 

தன்னில் பற்றியுள்ள

சகல சீவன்களுக்குமான தாய்நிலை.! 

_வரிகள் ஸ்ரீ ஆரோன் _



 

புதன், 26 மே, 2021

பாரந்தான்..

மழலையது பாரந்தான் 
மாற்றாந்தாயிடம்
மண்டியிட..

இளமையாது பாரந்தான் 
வறுமைதனில்
வளரும்போது..

கல்வியது பாரந்தான் 
மனசில் சஞ்சல-மது
ஒட்டிக்கொள்ள..

காதலது பாரந்தான் 
கணக் கொண்ணா
கற்பனைதனில் அமிழ்ந்திருக்க..

மதமதும் பாரந்தான்
நெறிமுறையற்ற
ஜீவியத்தில் முற்பட.. 

உறவுகள் பாரந்தான்  
வாய் வார்த்தைகள்
தடுமாறினால்..

குடும்பவுறவு பாரந்தான் 
ஒழுக்கசீரன்பு
ஊடலில்லாதுபோக..

எத்தொழிலும் பாரந்தான் 
பொறுமையும், விசுவாமும்
தூரமானால்..

ஊணுடலும் பாரந்தான்  
உன் பழக்கவழக்கங்கள்
தேகத்தை பாழாக்க..

வாழ்க்கையது பாரந்தான்    
சிரஞ்சீவிய வழிகள் 
தடம் மாறினால்..

_வரிகள்: ஸ்ரீ ஆரோன்_

கோபம்.!


ஐம்புலன் வழிநுழைந்து
இருதயத்தின் ஓரம்
உருவாகும் ஒரு கீற்று
முளைக்கு இடம்மாறி
தனை உணரவைத்து.!
ன்னை ; என்னை உருமாற்றும்
(டு)தியின் பெயர்தான் கோபம்.

_வரிகள்: ஸ்ரீ ஆரோன்_

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

உதவாதினி ஒரு தாமதம் ..!!


உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!
மூவேந்தர் காலத்தில்
ஈழத்திற்கு படை தந்தாய்;
இறுதிப்போர் காலத்திலும்
உணர்வோடு படை கூட்டினாய்
அதுபோதும் இனிப்போதும்  
எழுந்திரு எழுந்திரு ஏற்றோர் தமிழே
உனக்காய் நீ போராட எழுந்திரு !

எத்தனை எத்தனையாயிரம்
பஞ்சாயத்துகள் உனக்கு ?
எண்ண.. எண்ண .. எழுத .. எழுத 
முற்றிலா இராடினமாய் சுற்றுது
ஊருக்கூர் பங்கங்கள் சீவியத்திற்கு எதிராய் !
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!
 
இன்னும் எத்தனை காலம் 
மத்தியில் ஓரவஞ்சகம்; 
மாநிலத்தில் வெறுமையோடு
இதுதான் விதியென்று - கண்டும் காணாது 
உன்தேசம் அடகுவைத்து மத்திய கிழக்கிலும்
சிங்கப்பூர்,  மலேசியாவிலும் 
கொத்தடிமையாய் இரந்து திரிவாய் .!
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!

ஆட்சிக்கட்டிலில் அமர்வோனெலாம் 
''திராவிடன் நாமென்று'' உறவுசொல்லி 
ஐந்து சந்ததிக்குமான ஆஸ்தி, அந்தஸ்தை 
உன்வயிற்றில்  திருடுகிறான்;
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!

சமஸ்கி-இந்தி உனக்கு - ஆனால்
வடக்கோ(ன்) ஜீவனோபாயம்-இன்று
அரைகுறை தமிழில் தமிழகத்தில்
இதுதான் நகைச்சுவை.! 
கொடைத் தமிழினமே "இன்னுமா நீ..
வந்தவரை வாழவைப்பாய்?"
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!

சாதிச் சாக்கடையில் சலிக்கப்பட்டு
சத்தியம் புரியாது புத்திபேதலித்து வீழ்ந்து
சர்வாங்கமாய் நீயின்று - இது
நீண்டால் இனியும் மீளாது தமிழினமது
எதிர்கால மீள்ச்சிக்கு !
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!

ஐந்தாயிரம் அற்ப ரொக்கத்திற்கும்
ஆள்கொல்லும் வெறிநீருக்கும் அடிமையாயி
முத்தான ஐந்து வருசத்தை அடகுவைத்து
தினம் தேவைக்கு  நிதமொரு ஆர்ப்பாட்டம்
வீரத்தமிழே  வெட்கமாய் இல்லை உனக்கு  ?
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!

தொழிலாளர் நலச் சட்டங்களில்
பாதகத் திருத்தம் கேள்விகேட்டால் துப்பாக்கிச் சூடு;
வேளார்களை அகற்றி விவசாயத்தை தனியார் வசப்படுத்தும்
ஆட்சியர்கள் சதித்திட்டம்  முதாளிகளுக்காக..
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!

காவிரிப்படுகையில் மீத்தேன்
அனல் மின் திட்டம்
எரிவாயு குழாய், கடற்கரைகளில் அணுமின் நிலை
மதுக்கடைகள், மணல்; இரும்புத் தாது கொள்ளை
உடனே விழி தமிழா
உதவாதினி ஒரு தாமதம்.!!

_வரிகள்: ஸ்ரீ ஆரோன்_ 

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...