செவ்வாய், 27 செப்டம்பர், 2022

வியர்வை மகுடம்

என் மகுடத்த்தின்
அத்தனை முத்துக்களும் 
நான் சிந்திய வியர்வையின் ஈற்றுருவே.!

வரிகள் ஶ்ரீ ஆரோன்

திங்கள், 26 செப்டம்பர், 2022

என் மைந்தனே…


உன் மழலைப் புன்னகையில்
என்னிதயச் சுவர்களில்
மலர்கிறது பலகோடிப் பாரிஜாதம்

உன் விரல்கள்
காற்றில் மீட்டும் வீணையின் நாண்கள்
என் காதுகளில் அத்தனையும்
நிசப்தஸ்வரங்கள் பேச..

உன் பிஞ்சுக்கால்கள்
விண்ணை நோக்கி உந்தும்-அது
நீ வானிலும் நடக்க பயில்கிறாயோவென்று
பூரிக்கிறேன் என் குமரா !

மாமைந்தனே நீ..
அழுகையிலும் குழைந்து துடிக்கையிலும்
உலகயுத்தத்தின் பேரவலம்
மையங் கொள்கிறது என்னிதயத்தில் ! 

பாலுக்கிரங்கி  என் பாலகன் - நீ..
"இங்கா.. இங்கா.." என்று தவிக்கையிலும்
உனைத் தூக்கி உலாத்தச் சொல்லும்
"உக்கு.. உக்கு.." என்னும் வார்த்தைற்கும் 
இதுமுதல் ன்கராதியில்  பொருழுண்டு !

வரிகள் தந்தை ஶ்ரீ ஆரோன்

மலையானேன்.!


எனை நானே செதுக்கிச்.. செதுக்கிச்
சிலையானேன் - உனை நீ
செதுக்கவேயின்று நான் மலையானேன்.!

வரிகள் தந்தை ஶ்ரீ ஆரோன்

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

வா என் கண்ணே..



வா என் கண்ணே..

எங்கள் முழுமுதற் கருவூலமாய் - நீ

இப்பிறப்பில் பெற்றேகிய பேரானந்தமும் - நீ

அது உள்ளாராத் தழுவிய அன்றே 06-ஜூலை-2022

தங்கத் தமிழுக்கு ஆனி 22_டுமாம்;

*

வா என் கண்ணே..

உன் குயவர் நாம் 

உன்னோடு கண்ணுறங்கா

இராத்திரிகள் அத்தனையும்

கண்மணியுனை காக்கத்தானே 

கவுரவமாய் விடிகிறது;

*

வா என் கண்ணே..

உன் மழலைப் புன்னகையில்

என்னிதயச் சுவர்களில்

மலர்கிறது பலகோடிப் பாரிஜாதம்;

*

வா என் கண்ணே..

உன் விரல்கள்

காற்றில் மீட்டும் வீணையின் நாண்கள்

என் காதுகளில் அத்தனையும்

சப்தஸ்வரங்களாய் பேச;

*

வா என் கண்ணே..

உன் பிஞ்சுக்கால்கள்

விண்ணை நோக்கி உந்தும் - அது

நீ வானிலும் நடக்க பயில்கிறாயென்று

பூரிக்கிறேன் குமரா;

*

வா என் கண்ணே..

நீ அழுகையிலும்,

குழைந்து தவிக்கையிலும்,

தந்தையென் இன்னிதயத்தில்

உலகயுத்தத்தின் பேரவலம் 

மையங்கொள்கிறது மைந்தனே;

*

வா என் கண்ணே..

என்னை நானே செதுக்கிச்..

செதுக்கிச் சிலையானேன்

உன்னைச் செதுக்கவே நானின்று

மலையானேன் உன்முன்னே - நீ

கலங்காதே கண்ணே வா..

வரிகள் ஸ்ரீ ஆரோன் 

***


ஹைக்கூ


நான் வரைந்த

ஓராயிரம் கவிதைகளில்

உயிரோடு வந்த ஒரே ஹைக்கூ நயோ_நீ.! 

வியாழன், 22 செப்டம்பர், 2022

பற்றம் பரமேறிய ஆங்கு..

அற்ப அஞரது ஆதாயித்து 

அறுதொழில் கோணாது பேணியவர்

சாப அமரக்கமறுத்து ,

அற்கா பேரின்பப் பரமனின் குழவியவர்

நம்மால் பிண்டமற நொறுக்கப்பட்டு

நம்மில் சீவனானவர்  நமக்காய்..

பாவமேற்று நிந்தனையுற்றேக..

தேவமிழ்தங்கொண்டு அல்லல் அளறறுத்து

ஒப்பிலா சீரணித்தவர் அதனாயமாய்

ஆசிலா அற்று.. அற்று.. அவியுணவாய்

பற்றம் பரமேறிய ஆங்கு ஆக்கமே என்யேசு.!

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...